புதன், 30 ஜூலை, 2008
manasu
கைத்தடி உடைந்தகுருட்டுக்கிழவன்போல்தடுமாறி நகரும் கும்மிருட்டு.சின்ன வாய்க்காலின் எல்லையில்தென்னம் ஓலைகளோடுஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.காலையில் பெய்த மழையில்தலைக்குளித்துமாலை வெயிலில் மஞ்சள் பூசிகருப்புக் கரைத்த காற்றுடன்தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்அந்த நீள வயல்..சேற்றுக் குழிகளுக்குள்குரல்வளை நொறுங்ககத்திக் கொண்டிருக்கும்ஈரத்தவளைகள்.சொட்டுச் சொட்டாய்தென்னைமரம் உதிர்க்கும்சேமிப்புத் துளிகளின்சலங்கைச் சத்தம்.சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்தூக்கம் கலைந்துசுவடு சுவாசித்து அலையும்எறும்புக்கூட்டங்கள்வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசைதிண்ணைகளில் கூந்தலசைத்துச்சிரிக்கும்மண்ணெண்ணை தீபங்கள்.போர்வைகளைத் துளைக்கும்சில்மிஷக்காற்று..கவிதை போல் காதுகளுக்குள்கூடாரமடித்துக் கிடக்கும்ஓர் மழைக்காலக் குருவியின்மழலைப்பாடல்.கை தொடும் தூரத்தில்விட்டத்தில் கட்டிய தொட்டிலில்விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்என் மூன்று மாதக் குழந்தை..தொட்டில் கயிறின் முனைபிடித்துபடுக்கைக் கரையில்முந்தானை முனைகள் மெலிதாய்க் கலையவிரல் தொடும் தூரத்தில்அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.மழலைக்காய் அவள் இசைக்கும்தாலாட்டில் தான்தூங்கிப் போகவேண்டுமென்றுஆழமாகிப் போன பின்னிரவிலும்பிடிவாதமாய் விழித்திருக்கிறதுஎன்ஒற்றை மனசு.(கவிதைப் போட்டி ஒன்றில் கவிஞர் பாவண்ணன் அவர்களால் முதல் பரிசுக்குரியதெனதேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை )RrgardsKailash
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக