புதன், 30 ஜூலை, 2008

internet love

இணையம்,


அட்சக் கோடுகளையும்தீர்க்கக் கோடுகளையும்இறுக்கமாய்க் கட்டிவிட்டு,பூமிப் பந்தைஒற்றைப் புள்ளியில்உட்கார வைத்திருக்கிறது இணையம்.மடியாத ஆடைகளுக்காய்மல்லிட்டு,கண்ணாடியின் கண்களுக்கு முன்இமைக்காமல் நின்று,பிம்பங்களோடுபிடிவாதம் பிடித்துயாரும் இப்போது காதலிப்பதில்லை.விரல் தொட்டுக் கசங்கிப் போய்உதட்டுப் பதிவுஒப்பந்த முத்தங்ககளின் மேல்கையெழுத்திட்டனுப்பும்காதல் கடிதங்கள்இப்போதெல்லாம் காணக் கிடைப்பதில்லை.கடிதத்தைப்,பட்டு விரல் தொட்ட வினாடியில்நெற்றியோரம்வியர்வை அரும்பியதா?விழிகளோரம் வெட்கம் விளைந்ததா ?என்பதைநேரில் தரிசிக்கும் வரமும் வருவதில்லை.இப்போதெல்லாம்காதல்பூங்காக்களில் பூப்பதில்லை.நிம்மதி கொள்கின்றன பட்டாம் பூச்சிகள்,பூங்காக்களில் பூக்கள் தான்பூக்கின்றனவாம்.கடற்கரையில் கால் படுவதை விடகணிணிப் பலகையில்விரல் தொடுவதையேவிரும்புகிறது கல்லூரி வட்டம்.இணையம் ஊமையாகும்நாட்களில்ஐந்து தலைபடபடப்புப் பாம்பொன்றுகாதலரை தீண்டித் தொலைக்கும்.அவசர தொலைபேசிஅழைப்புகளோஇணையத்தின் இணைப்புகளால்இருட்டறைக்குள் எறியப்படும்.காதலியின் கண் கண்டுகால் நகர்த்தா வார்த்தைகள்கணிணி கண்டால் தான்கையசைக்கின்றன.பட்டென்று பதிலிறுத்தால்பல்லிடுக்கில் வார்த்தைகள்படுகாயம் படக்கூடும்.இணையமோபட்டென்றுச் சொல்லென்றுபதட்டத்தைத் தருவதில்லை.உரசலின் வெப்பத்தை விடநம்பிக்கையின் சத்தம் தானேகாதலுக்குத் தேவை.மடிமீது தலைசாய்த்துமகரந்தங்கள் மயங்காமல்,விசைப்பலகையில் விரல் இருத்திகாதலை நிலை நிறுத்தல்சாத்தியமிங்கே.இணையம்வரம்புகளை மீறாமல்நரம்புகளை மீட்டும் தளமல்லவா.எல்லை மீறும் முறுக்கு மடல்களைநில்லென்று நிறுத்துதலும்சாத்தியமல்லவா.மின்மடலில் இதயங்கள்இடம் மாறும்,மின் அரட்டையில்மனம் கொஞ்சம் மெருகேறும்.காதலரே,இணையாக் காதலையும்இணையம் இணைக்கும்.முதல் பார்வையில் தான்காதல் வருமா,இனிமேல்முதல் மடலில் வருமென்றுமுழங்கிச் சொல்லுங்களேன்.முகிலினங்கள் அலைகிறதேமின்னஞ்சல் மறந்ததுவோஎனபுதிதாய்ப் பாடுங்களேன்.இணையத்தில் இணைப்புப் பிழைஎனகாதல் பொய்யைநவீனப் படுத்துங்களேன்.கிறுக்கல் கையெழுத்தென்றுகாதல் இங்கேமறுக்கப் படுவதில்லைமகிழுங்களேன்.இணையம் என்பதுஇமயம் தான்ஆனாலும்காதலரே கவனியுங்கள்,அருகிலேயேஅழகியொருத்தியை இருத்திக் கொண்டுநீதான் என் உலகம் என்றுஉங்களுக்கு யாரேனும்வலையில்வலை விரிக்கக் கூடும்.கணிப்பொறி வித்தையில்புகைப்படம் புதுப்பித்து,நடிகனின் நடையிலேமுடவனும் உங்கள் முன்வரக் கூடும்.உனக்கனுப்பியகாதல் கடிதத்தின்கண் காணாப் பிரதி,தபால்த் தலைச் செலவின்றிபல கன்னியரின்கணிணிச் ஜன்னல்களைக்காதலுடன் தட்டியிருக்கக் கூடும்.மாடலிங் தான் தொழிலென்றுமாடசாமியும், தன்முன் வழுக்கையைத் தடவிக் கொண்டும்மூச்சு விடாமல்இருமிக் கொண்டும்,யாஹூவுக்குள் வசிக்கக் கூடும்.அவரசக் காதலர்க்குஓர்அவசிய எச்சரிக்கை.தெருப் பெயர் மாறினாலும்தபால்க் காரன் சமாளிப்பான்,ஓர்சிறு புள்ளி மாறினாலேஇணையக் காரன் புறக்கணிப்பான்.நினைவில் கொள்ளுங்கள்.வாழ்வுக்குத் தேவை இணை.அதைத் தரும்இணையத்துக்கு இல்லை இணை !( சந்தவசந்தம் இணையக் குழுவில் எழுதிய கவியரங்கக் கவிதை. தலைப்பு : இணையத்துக்கு இல்லை இணை. )

கருத்துகள் இல்லை: