புதன், 30 ஜூலை, 2008

24 mani neram

இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை.நாற்பத்தெட்டு இருந்திருக்கலாம் ஒரு நாளைக்கு.இந்த அவசர ஓட்டங்கள் சிறு நிதான நடைகளாய் நிறம் மாறி இருக்கும்.என் சிந்தனைகள் இன்னும் கொஞ்சம் இளைப்பாறிச் சென்றிருக்கும்.என் வாரப்பத்திரிகை வாசிப்புகள்,தினசரித் தூக்கங்கள்,எல்லாம் மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்.இன்றைய மிச்சங்களை நாளைக்காய் பொறுக்கி வைப்பதும்,நாளைய கனவுகளை இன்னோரிடத்தில் நறுக்கி வைப்பதும் இல்லாமல் இருந்திருக்கும்.அந்த மெல்லியக் காலைப் போர்வைத் தூக்கம்,கட்டில் மீது தொடர்ந்திருக்கும்.பிந்தைய மாலைப்பொழுதின் ஏக்கம் இரவைத் தொட்டு முடிந்திருக்கும்.என்தோட்டத்து ரோஜா இதழ்கள் இளமை இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கும்.என்னை விடவும் ஏராளமாய்,அந்த ஈசல்ப் பூச்சி மகிழ்ந்திருக்கும்.
Regards
Kailash

கருத்துகள் இல்லை: