திங்கள், 25 ஆகஸ்ட், 2008

kailash

வியாழன், 31 ஜூலை, 2008

learn english

வணக்கம் உறவுகளே!
இன்று நாம் Grammar Patterns -1 றில் பதினொன்று மற்றும் பன்னிரண்டவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாக கற்கப் போகின்றோம்.
நீங்கள் எமது பாடங்களை தொடர்ந்துக் கற்று வருபவராயின் இன்று என்னப் பாடம் என்பதை நீங்களாகவே அறிந்திருந்திருப்பீர்கள். அதாவது
Grammar Patterns-1 இன் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.
அதனடிப்படையில் இதுவரை நாம் விரிவாகக் கற்றவை.
1. I do a Job.
2. I am doing a job.
3. I did a job.
4. I didn't do a job.
5. I will do a job.
6. I won't do a job.
7. Usually I don't do a job.
8. I am not doing a job.
9. I was doing a job.
10. I wasn't doing a job.
இன்று விரிவாக கற்கப் போவது பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வாக்கியங்களையாகும்.இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை இலக்க வரிசைக் கிரமத்தில் தொடரும்படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர எளிதாக இருக்கும்.
சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.
11. I will be doing a job.நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை
.12. I won't be doing a job.நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
இவ்விரு வாக்கியங்களும் எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Future Continuous Tense" அல்லது "Future Progress Tense" என்பர்.
இந்த எதிர்காலத் தொடர்வினையின் பயன்பாடானது ஒரு செயல் அல்லது நிகழ்வு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருக்கும் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாகும்.
(The future continuous tense expresses action at a particular moment in the future.)
Positive (Affirmative)Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ingI /You /He /She /It / We / You /They + will + be + doing a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.
NegativeSubject + Auxiliary verb + Auxiliary verb + not + Main verb with ingI /You /He /She /It /You /We /They + won’t + be + doing a jobQuestion (Interrogative)Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ingWill + I /you /he /she /it /you /we /they + be + doing a job?
கவனிக்கவும்: இந்த எதிர்காலத் தொடர்வினை கேள்வியாகப் பயன்படும் பொழுது "Auxiliary verb" அதாவது "துணை வினை" இரண்டு இடத்தில் பயன்படுவதை அவதானியுங்கள்.
நாம் கற்ற கடந்தப் பாடங்களில் அநேகமாக ஒரு வாக்கியம் கேள்வியாக மாறும் பொழுது அதன் துணைவினை "Auxiliary verb" வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும். ஆனால் இன்றையப் பாடத்தில் ஆரம்பத்திலும் அதன் பின் "Subject" " இற்குப் பின்னாலுமாக இரண்டு இடங்களில் வந்துள்ளது. இதை கவனித்துக்கொள்ளுங்கள்.
இது (invariable) மாற்ற இயலாதது.
கீழுள்ள உதாரணங்களையும் பாருங்கள்.
Will you be doing a job?நீ செய்துக்கொண்டிருப்பாயா ஒரு வேலை?
Yes, I will be doing a job.ஆம், நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.
No, I won’t be doing a job.இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
Will you be speaking in English?நீ பேசிக்கொண்டிருப்பாயா அங்கிலத்தில்?
Yes, I will be speaking in English.ஆம், நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்
No, I won’t be speaking in English.இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன் ஆங்கிலத்தில்.
Will you be going to school?நீ போயிக்கொண்டிருப்பாயா பாடசாலைக்கு?
Yes, I will be going to school.ஆம், நான் போய்க்கொண்டிருப்பேன் பாடசாலைக்கு.
No, I won’t be going to school. (will + not)இல்லை, நான் போய்க்கொண்டிருக்கமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே நாம் கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் (Affirmative Sentence) வாக்கியங்களை கேள்விப் பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.சரி பயிற்சியைத் தொடருங்கள்.1. I will be speaking in English.நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்.2. I will be sitting on the beach.நான் அமர்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில்.3. I will be sun-bathing in Bali.நான் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன் பாளியில்.4. I will be coming back to homeநான் திரும்பி வந்துக்கொண்டிருப்பேன் வீட்டிற்கு.5. I will be staying with my friend.நான் இருந்துக்கொண்டிருப்பேன் எனது நண்பருடன்.6. I will be celebrating my birthday.நான் கொண்டாடிக்கொண்டிருப்பேன் எனது பிறந்தநாளை.7. I will be signing the contract.நான் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் உடன்படிக்கை(யில்)8. I will be playing tennis at 10 am.நான் விளையாடிக்கொண்டிருப்பேன் டென்னிஸ் 10 மணிக்கு.9. I will be lying on a beach tomorrow .நான் சாய்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில் நாளை.10. I will be having dinner at home.நான் (இரவு) சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் வீட்டில்.11. I will be singing in the concert on Tuesday.நான் பாடிக்கொண்டிருப்பேன் சங்கீதக் கச்சேரியில் செவ்வாய் கிழமை.12. I will be going to Norway this summer.நான் போய்க்கொண்டிருப்பேன் நோர்வேயிற்கு இந்த கோடை காலத்தைக் (கழிக்க)13. I will be coming to work next week.நான் வந்துக்கொண்டிருப்பேன் வேலைக்கு அடுத்த வாரம்.14. I will be working this weekend.நான் வேலைசெய்துக்கொண்டிருப்பேன் இந்த வாரக்கடைசியில்.15. I will be sleeping in the hotel.நான் நித்திரையடித்துக்கொண்டிருப்பேன் விடுதியில்.16. I will be eating dinner with my friends this eveningநான் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் எனது நண்பர்களுடன் இன்று மாலை.17. I will be dancing at the party.நான் ஆடிக்கொண்டிருப்பேன் விருந்துபசாரத்தில்.18. I will be doing my duty.நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது கடமையை.19. I will be practicing English at nightநான் பயிற்சித்துக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் இரவில்.20. I will be speaking English in the officeநான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் அலுவலகத்தில்.21. I will be going to university.நான் போய்க்கொண்டிருப்பேன் பல்கலைக்கழத்திற்கு.22. I will be translating English to Tamil.நான் மொழிமாற்றிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.23. I will be flying on the flight.நான் பறந்துக்கொண்டிருப்பேன் விமானத்தில்.24. I will be studying for the exam.நான் படித்துக்கொண்டிருப்பேன் பரீட்சைக்காக.25. I will be doing my homework.நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது விட்டுப்பாடம்.
Homework:A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.B. மேலுள்ள உதாரணங்களைப் பார்த்து இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.C. இன்று நாம் கற்ற (Future Continuous Tense) எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களைப் போல் நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு இதே நேரம் இதே திகதி என்னென்ன செய்துக்கொண்டிருப்பீர்கள் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். பின் அவற்றைப் பட்டியலிட்டுக்கொண்டு அதனை நாம் இன்று பயிற்சி செய்ததுப் போன்று ஆங்கிலத்தில் எழுதி பயிற்சி செய்யுங்கள்.
கவனிக்கவும்:
இவ்வாறு தொடர் வாக்கியங்களாகவும் எழுதிப் பயிற்சி செய்யலாம்.I will be waiting for you when your plane arrives tonight.நான் காத்துக்கொண்டிருப்பேன் உனக்காக உனது விமான வந்தடையும் பொழுது இரவு.Sarmilan will be playing on the computer when his mother comes home. சர்மிலன் விளையாடிக்கொண்டிருப்பான் கணனியில் அவனது தாயார் வீட்டிற்கு வரும் பொழுது.
I will be studying when you come.நான் படித்துக்கொண்டிருப்பேன் நீ வரும் பொழுது.
At the same time tomorrow I will be staying in America.இதே நேரத்தில் நாளை நான் இருந்துக்கொண்டிருப்பேன் அமெரிக்காவில்.
சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது வழமையான மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Posted by HK Arun at Tuesday, July 22, 2008 2 comments
Labels: , ,
Thursday, July 3, 2008

ஆங்கில பாடப் பயிற்சி 12 (Past Continuous Tense)
இன்று நாம் விரிவாக கற்கப் போவது Grammar Patterns 1 இன் 9 மற்றும் 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களையாகும். அதே இலக்க வரிசையில் Grammar Patterns 2, Grammar Patterns 3 யும் ஒரு முறைப் பார்த்துக் கொள்ளுங்கள்.9. I was doing a job.நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.10. I wasn't doing a job.நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.இவற்றை தமிழில் “இறந்தக் கால தொடர்வினை” என்று கூறுவர். ஆங்கிலத்தில் "Past Continuous Tense" அல்லது "Past Progressive Tense" என்றழைக்கப்படுகின்றது. அதாவது ஒரு செயல் அல்லது சம்பவம் ஒரு வரையரைக்குள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது என்பதை இந்த "இறந்த காலத்தொடர்வினை" விவரிக்கிறது.நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.
இந்த 9, 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களில் I, He, She, It, போன்றவற்றுடன் "was" இணைந்து வரும். You, We, They உடன் "were" இணைந்து வரும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.Positive (Affirmative)Subject + Auxiliary verb + Main verb + ingI /He /She /It + was + doing a job.You / We /They + were + doing a job.இதில் 'Subject' வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது.NegativeSubject + Auxiliary verb + not + Main verb + ingI /He /She /It + wasn’t + doing a jobYou /We /They + weren’t + doing a jobQuestion (Interrogative)Auxiliary verb + Subject + Main verb + ingWas + I /he /she /it + doing a job?Were + you /we /they + doing a job? இவற்றில் Auxiliary verb "துணை வினை" வாக்கியத்தின் முன்பாகவும், Subject அதாவது "விடயம்" அதன் பின்னாலும் மாறி வந்துள்ளது.இப்போது இந்த “இறந்த காலத்தொடர்வினை” வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம். கீழுள்ள உதாரணங்களை பாருங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் நீங்களாவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.Were you doing a job?நீ செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?Yes, I was doing a job.ஆம், நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.No, I wasn’t doing a job. (was + not)இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.Was he speaking in English?அவன் பேசிக்கொண்டிருந்தானா அங்கிலத்தில்?Yes, he was speaking in English.ஆம், அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்No, he wasn’t speaking in English. (was + not)இல்லை, அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.Were you going to school?நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்களா பாடசாலைக்கு?Yes, we were going to school.ஆம், நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.No, we weren’t going to school. (were + not)இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.இப்போது கீழே (Affirmative Sentences) வாக்கியங்கள் 25 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின் அவற்றை கேள்வி பதிலாக மாற்றி அமையுங்கள்.1. I was reading a book.நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம்.2. I was looking for a job.நான் தேடிக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.3. I was studying.நான் படித்துக்கொண்டிருந்தேன்.4. I was watching television.நான் பார்த்துக்கொண்டிருந்தேன் தொலைக்காட்சி.5. I was making dinner.நான் தயாரித்துக்கொண்டிருந்தேன் (இரவு) உணவு.6. I was waiting in the bus stand.நான் காத்துக்கொண்டிருந்தேன் பேரூந்து நிறுத்தகத்தில்.7. I was waiting for you.நான் காத்துக்கொண்டிருந்தேன் உனக்காக.8. I was talking with my fiancéeநான் பேசிக்கொண்டிருந்தேன் எனது காதலியிடம்/ நிச்சயிக்கப்பட்டவளிடம்.9. I was snowboarding.நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்.10. I was driving through the desert.நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருந்தேன் பாலைவனத்தின் ஊடாக.11. I was sitting at the class room.நான் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் வகுப்பு அறையில்.12. I was listening to the news.நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் செய்திகளுக்கு.13. I was discussing with my father.நான் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் எனது தந்தையுடன்.14. I was complaining to policeநான் முறையிட்டுக்கொண்டிருந்தேன் காவல் துறையிடம்.15. I was listening to my iPod.நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் ஐபொட்டிற்கு.16. I was sleeping last night.நான் நித்திரைக்கொண்டிருந்தேன் கடந்த இரவு.17. I was writing the email.நான் எழுதிக்கொண்டிருந்தேன் மின்னஞ்சல்.18. I was working at the factory.நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் தொழிற்சாலையில்.19. I was eating bread.நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வெதுப்பி.20. I was playing soccer.நான் விளையாடிக்கொண்டிருந்தேன் சொக்கர்.21. I was walking on the street.நான் நடந்துக்கொண்டிருந்தேன் தெருவில்.22. I was singing in the concert.நான் பாடிக்கொண்டிருந்தேன் சங்கீதக் கச்சேரியில்.23. I was wearing a full sleeves shirt.நான் உடுத்திக்கொண்டிருந்தேன் ஒரு முழுக் கை சட்டை.24. I was walking past the car.நான் நடந்துக்கொண்டிருந்தேன் மகிழூந்தைக் கடந்து.25. I was eating ice-cream.நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் குளிர் களி.Homework:1. இந்த 25 வாக்கியங்களையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.
2. மேலுள்ள அதே 25 வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள் பார்க்கலாம். நினைவில் வைத்துக்கொள்ளங்கள். (I/ He/ She/ It உடன் was + verb with ing வரும். You/ We/ They உடன் were + verb with ing வரும்.)3. நீங்கள் நேற்று இதே நேரம், கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த வருடம் எனனென்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? என்னென்ன உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பவற்றைப் பட்டியல் இட்டு மேலே நாம் கற்றதைப் போன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்.நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிவதால், உங்களின் வாசிக்கும் ஆற்றலின் தன்மையையும், ஆங்கில அறிவையும் மிக எளிதாக வளர்த்துக்கொள்ளலாம். அதேவேளை எழுத்தாற்றலையும் இலகுவாகப் பெற்றுவிடலாம்.இலக்கண விதி முறைகள்இறந்தக்கால தொடர்வினை “Past Continuous Tense” இன் செயல்பாட்டை ஐந்து விதமாக வகைப்படுத்தப்படுத்தலாம். (There are five main uses of this tense) அவை:1. ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் என்ன நடந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.உதாரணம்:I was reading a book yesterday evening.நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம் நேற்று மாலை.எப்பொழுது வாசித்துக்கொண்டிருந்தேன்? - நேற்று மாலை.வாசித்தேன் என்றால் – இறந்தக் காலம்வாசித்துக்கொண்டிருந்தேன் என்றால் – இறந்தக்கால தொடர்வினை,அதாவது செயல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக ஒரு வரையரைக்குள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. (Action or situation that had already started and was still continuing at a particular time.)இதுப்போன்ற 25 வாக்கியங்களையே மேலே நாம் பயிற்சி செய்தோம். மேலும் சில வாக்கியங்களை இங்கே பாருங்கள்.The sun was shining this morning.சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது காலையில்.The birds were singing.பறவைகள் பாடிக்கொண்டிருந்தன.The children were playing in the garden.குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் தோட்டத்தில்.வரைப்படம் - 12. ஒரு சம்பவம் அல்லது நேரத்தை குறிப்பிட்டு, அச்சமயம் என்ன நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.Last night at 6 PM, I was eating dinner.கடந்த இரவு 6.PM க்கு, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் இரவு சாப்பாடு.At midnight, we were driving through the desert.நள்ளிரவில், நாங்கள் வாகனமோட்டிக்கொண்டிருந்தோம் பாலைவனத்தின் ஊடாக.Yesterday at this time, I was talking with my family.நேற்று இதே நேரத்தில், நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது குடும்பத்தாருடன்.வரைப்படம் - 2
3. இறந்த காலத்தொடர்வினையுடன் always, constantly போன்ற வினையெச்சங்களை இணைத்து பயன்படுத்தல். அநேகமாக இவை வெறுப்பூட்டிக்கொண்டிருந்த, எரிச்சலூட்டிக் கொண்டிருந்த, கோபமூட்டிக்கொண்டிருந்த, திகைப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.
இது "used to" என்பதின் பயன்பாட்டிற்கு ஒத்தது. (Used to என்பதின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.)
உதாரணம்:
She was always coming to class late.அவள் எப்பொழுதும் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்புக்கு தாமதமாக.
Karuna was always irritating me.கருணா எப்பொழுதும் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான் என்னை.
I didn’t like him because, He was constantly talking.நான் விரும்பவில்லை அவனை ஏனெனில், அவன் (அடிக்கடி) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.வரைப்படம் - 3

மேலே இலக்கண விதி முறைகளாக 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கற்றாலும் அவை ஒரே மாதிரியானவைகளே. வரைப் படங்களைப் பார்க்கவும்.
4. இரண்டு செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடைப் பெற்றுக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல். (two actions were happening at the same time.)உதாரணம்:Malathi was writing a letter while Pandian was reading the News paper.மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள். Sothiya was cooking dinner while her friend was setting the table.சோதியா சமைத்துக்கொண்டிருக்கும் போது அவளுடைய நண்பர் மேசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.
The baby was crying while we were having our dinner.குழந்தை அழுதுக்கொண்டிருக்கும் போது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.I was studying while she was making dinner.நான் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள் (இரவு) சாப்பாடு. People were sleeping while army was shelling.மக்கள் நித்திரைக்கொண்டிருக்கும் போது இராணுவம் எறிகணை வீசிக்கொண்டிருந்தது.
வரைப்படம் - 4

5. ஒரு செயல் அல்லது நிகழ்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்பட்ட இன்னுமொரு நிகழ்வை வெளிப்படுத்தல். இதில் இறந்தக்கால தொடர்விணையுடன் சாதாரன இறந்தக்கால விணையும் இணைந்து பயன்படும். (use the Past Continuous tense with the Past Simple tense)உதாரணம்:
I was walking in the park (நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வு) when it started to rain. (இடையில் ஏற்பட்ட நிகழ்வு)I was walking in the park when it started to rain.நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது மழைப் பெய்ய ஆரம்பித்தது.I was brushing my teeth when my mother called me.நான் எனது பற்களை துலக்கிக்கொண்டிருக்கும் போது எனது தாயார் அழைத்தார் என்னை.I was eating dinner when somebody knocked on the doorநான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தட்டினர் கத(வை)வின் மேல்.Ravi was sleeping last night when someone stole his car.ரவி நேற்று இரவு நித்திரையடித்துக்கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் திருடிவிட்டார் அவனுடைய மகிழூந்தை.I was walking past the car when it exploded நான் மகிழூந்தைக் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அது (மகிழூந்து) வெடித்தது. I was having a beautiful dream when the alarm clock rang.நான் ஒரு அழகான கணவு கண்டுக்கொண்டிருக்கும் போது கடிகாரம் ஒலித்தது.வரைப்படம் - 5
While, When பயன்பாடுகள்
உதாரணம் 1:Malathi was writing a letter while Pandian was reading the News paper.மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்Malathi was writing a letterமாலதி எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு கடிதம்.while – (அப்)போது (எழுதிக்கொண்டிருக்கும் போது)Pandian was reading the News paper.பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.எப்போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்? மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது.
எனவே இவ்விரண்டு வாக்கியங்களையும் இணைத்து "மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு செய்தித்தாள்" என ஒரே தொடர் வாக்கியமாக அமைந்துள்ளதை அவதானிக்கவும்.உதாரணம் 2:I was walking in the park when it started to rain.நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது.இதனையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.I was walking in the park – நான் நடந்துக்கொண்டிருந்தேன் பூங்காவில்.when – எப்பொழுது (நடந்துக்கொண்டிருக்கும் பொழுது)it started to rain - ஆரம்பித்தது மழைப் பெய்வதற்குஎப்பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது? நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது.எனவே இவ்விரண்டு வாக்கியங்களை இணைத்து "நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப்பெய்ய ஆரம்பித்தது." என்று ஒரே வாக்கியத் தொடராக அமைந்துள்ளது.
இதுப்போன்ற பயன்பாட்டின் போது முதல் நடந்துக்கொண்டிருந்த செயலை அல்லது நிகழ்வை "background situation" என்கின்றனர்.குறிப்பு:இவ்வாக்கியங்களை இப்படியும் பயன்படுத்தலாம்.I was studying while she was making dinner.While I was studying, she was making dinner.I was walking past the car when it exploded.When the car exploded, I was walking past it.Adverb - வினையெச்சம்கீழுள்ள உதாரணங்களில் இறந்த காலத்தொடர்வினையின் போது always, only, never, ever, still, just போன்ற வினையெச்சங்கள் வினையுடன் இணைந்து பயன்படும் போது, அவ்வாக்கியங்களின் கருப்பொருள் எவ்வாறு மாறுப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.She was coming to class late.அவள் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக. இவ் வாக்கியத்தில் "வினையெச்சம்" பயன்படுத்தும் போது அதன் அர்த்தத்தை அவதானியுங்கள்.She was always coming to class late.அவள் எப்பொழுதுமே வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக.குறிச்சொற்கள் Signal wordswhilewhenசரி! பயிற்சிகளைத் தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.இன்றைய பாடத்தில் எவ்வித கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் எழுதுங்கள். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில் சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்டு எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.எமது இந்த ஆங்கில பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகள் இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்கப்படும். அல்லது புதிதாக தொடங்கியிருக்கும் "ஆங்கிலம் துணுக்குகள்" பகுதியூடாக வழங்கப்படும்.இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக் கொள்ள மறவாதீர்கள்.
நன்றிஅன்புடன் ஆசிரியர் அருண்
Posted by HK Arun at Thursday, July 03, 2008 3 comments
Labels: , ,
Wednesday, July 2, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 2 (Use a/an - Vowels and Consonant)
ஆங்கிலத்தின் மொத்த 26 எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் - 5, மெய் எழுத்துக்கள் - 21 ஆகும்.உயிர் எழுத்துக்கள் Vowels Sounda e i o u = 5மெய் எழுத்துக்கள் Consonant Soundb c d f g h j k l m n p q r s t v w x y z = 21பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு/ஓர் என்பதைக் குறிக்க பெயர் சொல்லுக்கு முன்பாக ‘a’ பயன்படுத்தப் படுகின்றது. சில இடங்களில் ‘an’ என்றும் பயன்படுத்தப் படுகின்றது. இதில் "a" பயன்படுத்தும் இடங்கள் எவை? "an" பயன்பத்தும் இடங்கள் எவை? என்பதைப் பார்ப்போம்.பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்துகின்றது.உதாரணமாக:I am a Sri Lankanநான் ஒரு இலங்கையன்.I am a student.நான் ஒரு மாணவன்.This is a carஇது ஒரு மகிழூந்து.This is a book.இது ஒரு புத்தகம்.He is a teacher.அவர் ஒரு ஆசிரியர்.பொதுவாக a, e, i, o, u போன்ற உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொற்களுக்கு முன்னால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க "an" பயன்படுத்தப் படுகின்றது.உதாரணம்:This is an animal - (animal begins with a vowel sound)இது ஒரு மிருகம்.I am an Indianநான் ஒரு இந்தியன்.I am an English teacherநான் ஒரு ஆங்கில அசிரியர்.He is an old manஅவர் ஒரு வயதான(வர்) மனிதர்.கவனிக்கவும்மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.உயிர் எழுத்துக்களான a, e, I, o, u போன்ற பெயர் சொல் முன்னால் வந்தாலும் ‘a’ வாகவே பயன்படுபவைகள்.a user - யூசர் என்பதன் சத்தம் ‘உ” சத்தமாக இல்லாமல் “யு” வாக ஒலிப்பதால் ‘a’ பயன்படுத்தப் படுகிறது. (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)a university - இதன் சத்தமும் “உ” சத்தமாக இல்லாமல் “யு” என்றே ஒலிப்பதை அவதானியுங்கள்.a European country – இதிலும் ‘இ’ சத்தமாக இல்லாமல் ‘யு’ போன்று ஒலிப்பதே அதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)மெய் எழுத்து முன்னால் வந்தும் ‘an’ பயன்படும் இடங்கள். an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிர் எழுத்தின் சத்தமாக ஒலிப்பதால் இவ்வாறு “an” பயன்படுத்தப்படுகின்றது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)an honour - இதுவும் “அ’ உயிர் எழுத்தின் சத்தமாகவே ஒலிக்கிறது.இதற்கான காரணம் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கப்படாமல், உயிர் எழுத்துக்களாக ஒலிப்பவைகள், மெய் எழுத்துக்களாக ஒலிப்பவைகள் எனும் உச்சரிப்புக்கு அமையவே இவ்வாறு பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.இது போன்ற பயன்பாடுகளில் ஆங்கிலேயர்களும் பிளைவிடுவதாகக் கூறப்படுகின்றது.இவற்றை நாம் கவனமாக அவதானித்து கற்பது மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.

புதன், 30 ஜூலை, 2008

Since you said
We can never be together
I tried to search
A girl like you
I thought I found her
But just when I heard
That my heart doesn’t accept
Any newcomers…
I realized how much I love you
how is it. good r not good . i like this. what about ur opinion

Regards
kailash

thiramai

உன் மனம்
திறமைகளின் கடல் !!
அதில்
முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும்
மூச்சடக்கி நீ
மூழ்குவதைப் பொறுத்தது !!!
Regards
kailash
பிரிய நிலவே,எத்தனை நாளாகிறதுஉன்னைப் பார்த்து.ஓர்பதினான்காம் பிறைபோலநினைவிடுக்கில்நகர்கின்றன நாட்கள்.காதலின் கணங்களும்காத்திருப்பின் கனங்களும்கால்களைபாறையோடு பதியனிட்டதாய்இறுகிக் கிடக்கின்றன.தேடலின் விழிகள் கூடஉறைந்து விட்டன.ஆனாலும்விடாமல் என் உள்ளத்தை மட்டும்உழுது கொண்டே இருக்கிறேன்.உன்ஒவ்வோர் புன்னகைக்கும்உயிரின் ஒருபாதையைஉயிலெழுதிய பழக்கத்தால்இன்றுமிச்சமிருப்பதெல்லாம்பட்டா இல்லாத பகுதிகளே.என்பொருளாதாரப் பல்பறித்துகாதலுக்குகால நெய்ததில்என் முதுகெலும்பு முறித்தேகைத்தடி செய்ய வேண்டியகட்டாயம் எனக்கு.ஆனாலும்,உன் வயல்க்காட்டுத் தூறல்வற்றி விடவில்லை என்றே,என் நாற்றுக்கள்நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.ஒத்திகைக் காலக்குத்தகை முடிந்ததால்,அரங்கேற்ற மேடைதூண்களில்தவறாமல் தவமிருக்கிறேன்.நீவந்தபின் விரிப்பதற்காய்தோகைகளைக் கூடதுடைத்து வைத்திருக்கிறேன்.நீ,வரும் வடிவத்தை மறவாமல்கடிதத்தில் அனுப்பு.நீபல்லக்கில் வருவாயானால்நான்கடிவாளத்தோடுகாத்திருக்கக் கூடாதில்லையா ?
Regards
kailash
காதல் என்னும்ஓர்மின்விசிறி என் வீட்டுவிட்டத்தில்விடாமல் சுற்றுகிறது !இழுக்க இழுக்கமேலெழும்பும் ஓர்காதல் பட்டம்என் கூரை மேல் பறக்கிறது.காதல் என்னும்ஓர் கண்ணிவெடி,நினைவுகளின் பாரம் தாங்கிஉள்ளுக்குள்தவறாமல் வெடிக்கிறது.காதல் தீயைஅணைப்பதற்காய் ஊற்றும்அத்தனைதண்ணீர்ச் சிந்தனைகளும்எண்ணையாகவேமாறி விழுகின்றன.அணை உடைத்துப் பாயும்காதலை,என் கட்டைவிரல்களால்பொத்த முடியவில்லை.அதுஒரு முறை தேய்த்தாலே,அலாவுதீன் பூதமாய்அவதாரமெடுக்கிறது.காதலெனும்அந்த ஒற்றை விளக்குஎன்அத்தனை கண்களையும்அடைத்து விட்டுப் போனது.காதலெனும்அந்த கீழ்திசைத் தென்றல்என்அத்தனைக் கதவுகளையும்உடைத்து விட்டுப் போனது.கனவுகளுக்குப் பயந்துகண்களைத் திறந்தால்,கனவுகள் வந்துதிறந்த கண்களில் இறங்கிபார்வையைப் பிடுங்கிச்செல்கின்றன.வலுக்கட்டாயமாய் அதன்இறகுகளை அறுத்தால்அது சிறகுகளை அகலமாக்கிஉயரமாய் பறக்கிறது.என்ன செய்வதென்றுதெரியவில்லை.ஒருவேளைபோரிடாமல் மண்டியிட்டால்சமாதான உடன்படிக்கையோடுசென்றுவிடக் கூடுமோ ?வேண்டாம்,திண்ணையில் வைத்தஎண்ணை விளக்கில் வீழும்,விட்டிலாய் அது என்வீட்டில் சுற்றிவரட்டும்.அவிழ்ந்து வீழும்அமாவாசை இருட்டைவிட,எட்டாத உயரத்திலேனும்நிலவைப் பார்ப்பதேநிம்மதியாய் இருக்கிறது !
Regards
Kailash

tholan

ஒரு காலத்தில்
அவன் என்
பிரியத்தின் பிரதிநிதி
நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்
திணிக்க முடியாத தோழன்.
என் பள்ளிக்கூட நாட்களின்
பல்லாங்குழிச் சினேகிதன்.
தவளைக் குளத்தில் நீச்சலடித்து,
தூண்டில் நுனியில் மண்புழு சொருகி
ஓடைக்கரையில் மீன் பிடித்து,
அணில் மேல் கோடு வரைந்தது யாரென்று
விவாதம் செய்யும் பொழுதுகள் வரை
என் விரல் தொட்டே நடந்தவன்.
ஒரு
விடலைப்பருவத்தின் விளங்காப் பொழுதில்
காரணமே இல்லாமல் சண்டையிட்டோ ம்.
முகம் இறுக்கி கரம் முறுக்கி
முடிச்சிட்டு முடிச்சிட்டு
இருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்
நட்பு நுனி தொலைந்தே போயிற்று.
கோபத்தின் கொடுக்குப்பிடிக்குள்
எங்கள் நெருங்கிய நேசத்தின்
தண்டுவடங்கள் உடைபட்டுத் தொங்கின.
ஒரு படி கீழே இறங்கி
நான் பேசியிருந்தால்
ஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.
அந்த பச்சைமர ஆணித்தடம்
வெட்டுத்தோற்றத்தில் கட்டாயம்
வெளிப்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் பேசவில்லை.
வாலிபத்தின் சாலை முடிந்து
நடுவயதின் சந்தும் முடிவுற்று
முதுமையின் ஒற்றையடிப்பாதை வரை,
அவனோடு பேச விடவில்லை
பாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.
யுகத்தைக் கிழித்துக் கொட்டிய
என் குப்பைக்கூடையில்
என் ஆணவத்தின் அணிகலன்கள்
இன்று அறுந்து கிடக்கின்றன
என் நினைவுகளிடையே பீறிட்டுக் கிளம்பும்
இன்றைய நேசத்தின் ஓரிழை
நேற்று மாலையேனும் கசிந்திருந்தால்,
என்
பால்யகால பச்சைக்கிளைகளுக்கு
அவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.
நேற்றிரவு
மரணம் அவனைச் சந்திக்கும் முன்
ஒருமுறையேனும் அவனோடு அழுதிருக்கக்கூடும்.
Regards
kailash

24 mani neram

இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை.நாற்பத்தெட்டு இருந்திருக்கலாம் ஒரு நாளைக்கு.இந்த அவசர ஓட்டங்கள் சிறு நிதான நடைகளாய் நிறம் மாறி இருக்கும்.என் சிந்தனைகள் இன்னும் கொஞ்சம் இளைப்பாறிச் சென்றிருக்கும்.என் வாரப்பத்திரிகை வாசிப்புகள்,தினசரித் தூக்கங்கள்,எல்லாம் மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்.இன்றைய மிச்சங்களை நாளைக்காய் பொறுக்கி வைப்பதும்,நாளைய கனவுகளை இன்னோரிடத்தில் நறுக்கி வைப்பதும் இல்லாமல் இருந்திருக்கும்.அந்த மெல்லியக் காலைப் போர்வைத் தூக்கம்,கட்டில் மீது தொடர்ந்திருக்கும்.பிந்தைய மாலைப்பொழுதின் ஏக்கம் இரவைத் தொட்டு முடிந்திருக்கும்.என்தோட்டத்து ரோஜா இதழ்கள் இளமை இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கும்.என்னை விடவும் ஏராளமாய்,அந்த ஈசல்ப் பூச்சி மகிழ்ந்திருக்கும்.
Regards
Kailash
again and agian
உனக்கும் எனக்கும் ஒரே வயது
இருவருக்குமாய் சேர்ந்து
உள்ளுக்குள்
இருப்பது கூட ஒரே மனது தான்.
நான் எழுதி முடிக்கும் கவிதைகளை
நீ தான்
முதலில் படிக்க வேண்டுமென்று
முதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.
என் வீட்டுத் தொலைபேசி
ஊமையாய் இருக்கும் போது
உன்
தொலை பேசி பேசுவதில்லை.
ஒரே குடையில்
மழைக்கு ஒதுங்கியதுண்டு,
ஒரே ஓடையில்
நனைந்து கரைந்ததுமுண்டு.
உன்னோடு பேசியதில்
எனக்குள்
மறைக்கப்பட்ட பக்கங்கள்
குறைக்கப்பட்டிருக்கின்றன.
எப்போதுமே
நட்பு என்னும் விமானத்திலிருந்து
வெளியே குதித்ததில்லை நான்..
நீயும் தான்.
உங்களுக்குள்ளே என்ன என்று
எங்களுக்குத் தெரியுமென்று
தங்களுக்குள்ளே தர்க்கமிடும் மக்களிடம்
விளக்கவுரை சொன்னதில்லை
நீயும்.. நானும்.
காதலெனும் வலை கொண்டு
நம் கால்களை
நாமே கட்டிக் கொண்டதில்லை.
சிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத
கானகமாகவே இருக்கிறோம்.
இல்லை என்று நாம் சொன்னதற்கு
ஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.
மொழி பெயர்ப்பிலோ
பேசும் விழி பெயர்ப்பிலோ
பொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.
பனிக்கட்டிகளைத்
தின்னத்தந்தாலும்
தீக்கோழிகளாகவே திரிகிறோம்,
தீ மிதிக்கச் சொன்னவர்களுக்கெல்லாம்
சின்னச் சிரிப்பொன்றையே
சலுகையாய் சரித்திருக்கிறோம்.
எந்தப் பருவங்களிலும் நமக்குள்
நட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.
எந்த பருவ மழையும்
நம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.
காலை வணக்கம் சொல்லித் துவங்கும்
என் பொழுது,
இரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்
மெல்ல மெல்ல மறையத் துவங்கும்.
காதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.
நட்போ
நிழலைக் கூட
வலி கொள்ள விடுவதில்லை.
நட்பின் கடைசி நிலை காதல் தானாம்.
அப்படியென்றால்,
கடைசி நிலையே வேண்டாமென்று தான்
கைகோர்த்து வேண்டிக் கொள்வோம்.
நீயும்… நானும்.
Regards
Kailash

natpu

again and agian
உனக்கும் எனக்கும் ஒரே வயது
இருவருக்குமாய் சேர்ந்து
உள்ளுக்குள்
இருப்பது கூட ஒரே மனது தான்.
நான் எழுதி முடிக்கும் கவிதைகளை
நீ தான்
முதலில் படிக்க வேண்டுமென்று
முதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.
என் வீட்டுத் தொலைபேசி
ஊமையாய் இருக்கும் போது
உன்
தொலை பேசி பேசுவதில்லை.
ஒரே குடையில்
மழைக்கு ஒதுங்கியதுண்டு,
ஒரே ஓடையில்
நனைந்து கரைந்ததுமுண்டு.
உன்னோடு பேசியதில்
எனக்குள்
மறைக்கப்பட்ட பக்கங்கள்
குறைக்கப்பட்டிருக்கின்றன.
எப்போதுமே
நட்பு என்னும் விமானத்திலிருந்து
வெளியே குதித்ததில்லை நான்..
நீயும் தான்.
உங்களுக்குள்ளே என்ன என்று
எங்களுக்குத் தெரியுமென்று
தங்களுக்குள்ளே தர்க்கமிடும் மக்களிடம்
விளக்கவுரை சொன்னதில்லை
நீயும்.. நானும்.
காதலெனும் வலை கொண்டு
நம் கால்களை
நாமே கட்டிக் கொண்டதில்லை.
சிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத
கானகமாகவே இருக்கிறோம்.
இல்லை என்று நாம் சொன்னதற்கு
ஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.
மொழி பெயர்ப்பிலோ
பேசும் விழி பெயர்ப்பிலோ
பொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.
பனிக்கட்டிகளைத்
தின்னத்தந்தாலும்
தீக்கோழிகளாகவே திரிகிறோம்,
தீ மிதிக்கச் சொன்னவர்களுக்கெல்லாம்
சின்னச் சிரிப்பொன்றையே
சலுகையாய் சரித்திருக்கிறோம்.
எந்தப் பருவங்களிலும் நமக்குள்
நட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.
எந்த பருவ மழையும்
நம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.
காலை வணக்கம் சொல்லித் துவங்கும்
என் பொழுது,
இரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்
மெல்ல மெல்ல மறையத் துவங்கும்.
காதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.
நட்போ
நிழலைக் கூட
வலி கொள்ள விடுவதில்லை.
நட்பின் கடைசி நிலை காதல் தானாம்.
அப்படியென்றால்,
கடைசி நிலையே வேண்டாமென்று தான்
கைகோர்த்து வேண்டிக் கொள்வோம்.
நீயும்… நானும்.
Regards
Kailash
அரிச்சந்திர முலாம் பூசிய அவசர காலப் பொய்களுக்கே அமோக விளைச்சல் இன்று.உண்மைகளை தேடிய இதயத்தின் சாலைகளெங்கும் பொய்களின் பாதத் தடம் மட்டுமே.வறண்ட வார்த்தைகளை விற்றுத் தள்ளுகிறது ஈரமாய்க் கிடக்கும் நாக்கு.சில பொய்கள் மௌனத்துக்குப் பின்னால் மறைந்திருந்து சிரிக்கும்.சில பொய்கள் புன்னகைக்குப் பின்னால் சிரிக்காமல் இருக்கும்.குலுக்கிய கைகள் விட்டுப் போன பொய்கள் விரலிடுக்கில் பிசுபிசுத்துக் கிடக்கும்.சில பொய்கள் தலைமுறைப் பழக்கத்தோடு வெங்காய ஆடைகளாய்உருமாறி இருக்கும்.பொய்க்கால் குதிரைகளை சில நிஜக்கால்கள் நிற்க வைப்பது போல,பல பொய்கள் உண்மையின் ஆடைகளை தற்காப்புக்குப் போர்த்தியே தலைநீட்டும்,உள்ளுக்குள் அவைநிர்வாணமாய் உலவும்.பொய்மையும் வாய்மையிடத்து என்றான் வள்ளுவன்,தவறாய் புரிந்ததாலோ என்னவோ பொய்மைகள் மட்டுமே இன்று வாய்மையின் இடத்தில்.
Regards
kailash

manasu

கைத்தடி உடைந்தகுருட்டுக்கிழவன்போல்தடுமாறி நகரும் கும்மிருட்டு.சின்ன வாய்க்காலின் எல்லையில்தென்னம் ஓலைகளோடுஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.காலையில் பெய்த மழையில்தலைக்குளித்துமாலை வெயிலில் மஞ்சள் பூசிகருப்புக் கரைத்த காற்றுடன்தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்அந்த நீள வயல்..சேற்றுக் குழிகளுக்குள்குரல்வளை நொறுங்ககத்திக் கொண்டிருக்கும்ஈரத்தவளைகள்.சொட்டுச் சொட்டாய்தென்னைமரம் உதிர்க்கும்சேமிப்புத் துளிகளின்சலங்கைச் சத்தம்.சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்தூக்கம் கலைந்துசுவடு சுவாசித்து அலையும்எறும்புக்கூட்டங்கள்வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசைதிண்ணைகளில் கூந்தலசைத்துச்சிரிக்கும்மண்ணெண்ணை தீபங்கள்.போர்வைகளைத் துளைக்கும்சில்மிஷக்காற்று..கவிதை போல் காதுகளுக்குள்கூடாரமடித்துக் கிடக்கும்ஓர் மழைக்காலக் குருவியின்மழலைப்பாடல்.கை தொடும் தூரத்தில்விட்டத்தில் கட்டிய தொட்டிலில்விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்என் மூன்று மாதக் குழந்தை..தொட்டில் கயிறின் முனைபிடித்துபடுக்கைக் கரையில்முந்தானை முனைகள் மெலிதாய்க் கலையவிரல் தொடும் தூரத்தில்அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.மழலைக்காய் அவள் இசைக்கும்தாலாட்டில் தான்தூங்கிப் போகவேண்டுமென்றுஆழமாகிப் போன பின்னிரவிலும்பிடிவாதமாய் விழித்திருக்கிறதுஎன்ஒற்றை மனசு.(கவிதைப் போட்டி ஒன்றில் கவிஞர் பாவண்ணன் அவர்களால் முதல் பரிசுக்குரியதெனதேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை )RrgardsKailash

nallaneram

தண்ணீர் இழுக்கத் தேவையின்றி குழாயில் நீர் வந்தால் முழித்த முகம் நல்ல முகம் ரயில் நிலையம் வந்தவுடன் ரயில் வந்தால் நேரம் நல்ல நேரம்டீக்கடை காபி பாயாசமாய் இல்லாதிருந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிஒழுங்காய் வேலை செய்து ஷொட்டு வாங்கினால் நல்லது ரொம்ப நல்லது மதிய தயிர்ச் சாதம் புளிக்காமல் இருந்தால் நீரூற்றிச் சாப்பிடலாம் நிறைவாய் இருக்கும் செலவில்லாமல் குவார்ட்டர் கிடைத்தால்ஆத்ம சந்தோஷம் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து மனைவி திருப்தியடைந்தல்நிம்மதி வெகு நிம்மதிநேரத்திற்குப் படுத்துஉறங்க முடிந்தால்சொர்க்கமோ சொர்க்கம்காணி நிலம் வேண்டாம் பராசக்தி பத்துக்கு எட்டு அறை போதும் -வாடகைக்கு.

salanam

( கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல கவிஞர்களின் மனம் திறந்த பாராட்டுகளைப் பெற்ற கவிதைக் குறு
நாவல் உங்கள் பார்வைக்கு.
அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள் )
சலனம் : கவிதைக் குறு நாவல்.
சலனம் : 1
நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது.
திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பயவிதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்
மனசு நிறைய காதலித்தாளே
மவுனமாய் மனசை பரிசளித்தாளே
அவள்
பிறப்பித்தவை எல்லாம் போலிகளா ?
இல்லை அவள் பிம்பம் கூட
அவளுக்கு உரியதில்லையா ?
இதயம்
இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து
அவளை சுற்றிக் கொண்டிருந்தது.
அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
தமிழகத்தின் தலைநகரில்
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.
அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.
ஊட்டி மலையில் பறந்து திரியும் ஒரு
நாகரீக நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !
கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.
கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது
கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.
மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.
அவளோடு நட்புச் சுவர்கட்ட
அவன்
சீனப் பெருச்சுவரைத்
தாண்டவேண்டி இருந்தது.
பேசினான்.
பேசினாள்.
காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.
அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!
நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்
அவன் மனம் திறந்தான்.
உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்
இது காதலாய் இருக்குமோ எனும்
கவலையும் இருக்கிறது !!!
தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.
புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.
விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.
நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் விழி.
மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.
சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் நின்றான்.
சலனம் : 2
அவள் சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?
உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
வாரங்கள் தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?
நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்
நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!
உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.
அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.
சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்
கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.
விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.
நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.
நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.
இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.
நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.
மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.
இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்
என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை வேண்டியிருப்பேன்
ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.
சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.
எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.
சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!
அவன் பார்த்தாள்.
அவள் விழிகள் அகலமானவை.
மரங்கொத்தியின் அலகுபோல அது அவனை
ஆழமாய் கொத்தியது.
வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்
சலனம் : 3
ஏன் என்னைப் பிடிக்கலியா ?
மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்
பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!
ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்
அவள் சொன்னாள்.
ஆழமாய் அவனைப் பார்த்துவிட்டு
அழுத்தமாய் சொன்னாள்.
இல்லை !!!
காதல் எனக்கு பிடிக்கும்.
சொல்லவேண்டாமென்று நினைத்தேன்
சொல்லவைத்துவிட்டீர்கள்.
எனக்கு காதல் முளைத்து
நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது !!!
ஜாலியன் வாலாபாக் படுகொலை
அவன்
இதய செல்கள் மொத்தமும்
வினாடிநேரத்தில்
நடந்துமுடிந்துவிட்டது !!!
தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.
நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.
ஆமாம்.
ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
ஓரமாய் நடக்கத்துவங்கினாள் சுடர் விழி.
சலனம் : 4
வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?
அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?
சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?
ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?
புரியவில்லை அவனுக்கு.
முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.
மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.
சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?
கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.
தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்
காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே
அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.
பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.
தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.
வேண்டாம்.
இன்னும் இந்த நினைவுகள்.
அவள் காதலிக்கிறாள்.
காதலிக்கப் படுகிறாள்.
பக்கத்து தோட்டத்தில்
வேர்விட்ட மல்லிகையை
என் தோட்டத்தில்
பூ பூக்க நிர்ப்பந்திக்க முடியாது.
முடிந்தாலும் அது கூடாது.
முடிவெடுத்துவிட்டு மெதுவாய் எழுந்தான்.
தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.
களைப்பு
கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.
என்ன இனியன்,
கண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா?
இல்லை
கண்ணில் கடித்த கொசுவை
அங்கேயே நசுக்கிவிட்டாயா ?
சிரித்தபடி கேட்டாள் சுடர்.
அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.
நேற்று நடந்ததை மறந்துவிடு சுடர்
நீ காதலித்துக்கொண்டிருக்கிறாய் என்பது
எனக்கு தெரிந்திருக்கவில்லை
இழுத்துப் பிடித்து வார்த்தையை நிறுத்தினான்.
என்ன சொல்றீங்க இனியன் ?
காதலி யாய் இருக்கிறேனா ?
யார் சொன்னது ?
புன்னகையைப் படரவிட்டு கேட்டாள்.
நீ தானே
நேற்று கூறினாய்
நான்கு ஆண்டுக்காதல் பற்றி ?
கேட்பதைச் சரியாகக் கேட்கவேண்டும்.
காதல் எனக்கு
அறிமுகமாகி நான்கு ஆண்டு
ஆனதென்று தான் சொன்னேன்.
மூன்று ஆண்டுகளில்
முடிந்துபோனதைச் சொல்லவில்லையே.
சலனம் : 5
மின்னல் ஒன்று மிகச்சரியாக
கண்ணின் கருவிழிக்குள் விழுந்து
கதவடைத்துக் கொண்டது இனியனுக்கு.
அத்தனைக் கதவுகளும்
மொத்தமாய் திறந்ததாய்
இதயத்துக்குள் காற்று நுழைந்தது.
அட என்ன இது
இன்னொருவன் தோல்வியில்
எனக்கு மகிழ்ச்சியா ?
எனக்கே தெரியாமல்
எனக்குள் ஒரு
சுயநலச் சுரங்கம் இருக்கிறதா ?
விழுந்துவிட்டதைச் சொன்னவுடன்
விலாவிற்குள் குளிர் விளைகிறதே ?
என்ன சொல்றே சுடர்.
ஏன் ? என்ன ஆச்சு ?
வார்த்தைகள் நொண்டியடிக்காமல்
நடந்துவந்தன.
கல்லூரி நாட்களில் எனக்கு அறிமுகமானவன் இருதயராஜ்.
பள்ளிக் கூடத்தின் படிதாண்டிவந்த எனக்கு
கல்லூரியின் சாலைகள் கனவுகளை வளர்த்தன.
அது காதலா
இல்லை இனக்கவர்ச்சியா என்று
இனம் காண இன்னும் என்னால் இயலவில்லை.
காதலித்தேன்.
மனசு நிறைய
எனக்காய் அவன் எடுத்துக்கொண்ட அக்கறை
எனக்காய் பூக்களால் பாதை அமைத்த இவனுடைய அன்பு
என் தேவைகளை விழிகளால் கேட்டு
வினாடியில் முடித்த அவன் நேசம்.
இன்னும் ஏதேதோ இருக்கிறது இனியன்.
அப்புறம் என் விலகினாய் ?
மூன்று ஆண்டுக்காதல் என்பது
விளையாட்டல்லவே.
மனசின் செல்கள் கூட
மறுத்திருக்குமே ?
வேலிதாண்டியதாய் காரணம் காட்டி
வெட்டப்பட்டாயா ?
தந்தைக்கும் உனக்கும் இடையே
தலைமுறை இடைவெளி தலை தூக்கியதா ?
சொல் சுடர்
என்ன நடந்தது ?
பழையதைக் கிளறி
மனசைக் கீறிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.
பிரேதப் பரிசோதனையில்
காரணங்கள் விளங்கலாம் ஆனால்
பிணக்கிடங்கில் படுத்துக்கிடக்க எனக்கு மனமில்லை.
அவள் உணர்வுகள் புரியவில்லை.
ஆனால் ஆணிவேர் வெட்டப்பட்டுவிட்டது.
மரமும் பட்டுவிட்டது
இனி விறகுகளுக்கிடையே பச்சையம் பிறக்காது
என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.
அப்போதைக்கு அது அவனுக்கு
போதுமானதாய் இருந்தது.
சலனம் : 6
சிலநாட்கள் சிறகுகட்டிப் பறந்தபின்
கண்களில் சோகச் சுடர் உமிழ
வினாக்களை விழிகளில் பூசி அமர்ந்திருந்த
அவளிடம் கேட்டான்.
என்ன ஆயிற்று உனக்கு.
உன் கண்களுக்கு இன்று
ஒளியடைப்புப் போராட்டமா ?
இருள் நிறைந்திருக்கிறதே ?
என்ன சொல்வது இனியன்.
இது
காதலித்த என் மனசுக்கு
காதலன் தரும் பரிசு.
உளறி வைத்தாள்.
ஏன் ?
பழையவை மனசில்
பதிந்துவிட்டதா ?
விலகியபின் எண்னங்கள்
விசுவரூபமெடுக்கிறதா ?
கவலை தோய கேட்டான் இனியன்.
இல்லை .
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இனியன்.
நான் காதலித்தபோது
அவன் என்னைக் காதலித்தான்.
ஆனால்
என் சுதந்திரங்களைச் சிலுவையில் அறைந்தான்.
ஆண்களோடு பேசினால்
அநியாயம் என்றான்.
என் சிறகுகளுக்கு தங்கம் பூசினான்
ஆனால்
என்னைக் கூண்டுக்குள் அடைத்தான்.
அவன் நேசம் எனக்குப் பிடித்திருந்தது
ஆனால்
என் எல்லைகளை சுருக்கிக் கொள்வதில்
எனக்கு உடன்பாடில்லை.
புரியும் நிலையில் அவனில்லை
அது தான்
பிரியும் நிலைக்குக் காரணம்.
நண்பர் கூட்டத்தில் சிரித்தால்
நண்பர்களை மிரட்டினான்.
பேருந்தில் வந்தால்
ஆண்கள் இருப்பார்களென்று
அவன் வண்டியில் தான் அழைத்து வருவான்.
ஆரம்பநாட்களில் பெருமையாய் நினைத்தேன்
நாட்கள் நகர நகர
நந்தவனக் குயிலை
நடைவண்டியில் நடக்கவிடுவதாய்
உணரத்துவங்கினேன்.
வண்ணத்துப் பூச்சியாய் இருக்க பிரியப்பட்டேன்
அவன்
கூண்டுப்புழுவாய் இருக்க மட்டுமே அனுமதித்தான்.
அவனை மாற்ற பிரியப்பட்டு,
சிரமப்பட்டு
இறகுகளின் இறுக்கத்தை இழந்தேன்.
பிறகு
என் வட்டத்தைக் காப்பாற்ற
அவன் வட்டத்திலிருந்து வெளியே வந்தேன்.
இப்போது
தொலைபேசித் தொல்லை தொடர்கிறது.
மணியடித்தாலே
மாதாவை வேண்ட ஆரம்பித்துவிடுகிறேன்.
முதலிரண்டு வார்த்தைக்குள்
முழுவதுமாய் வியர்த்து விடுகிறேன்.
கவலைகளை வேதனைகளை இயலாமையை
இறக்கி வைத்துவிட்டு
மௌனத்தை இதழ்களில் பூட்டி அமர்ந்தாள்.
சலனம் : 7
சில நேரம் மௌனம் அதிகம் பேசும்
இன்றும் அப்படித்தான்.
நிமிடங்கள் விரைவாய் கரைய,
அவளருகில் அமர்ந்து
மௌனத்தைக் கேட்டு
மௌனமாய் இருந்தான்.
அன்று முதல்
அவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.
பேசுவதிலேயே பாதி நாள் கரையும்,
இ-மெயிலில் மீதிநாள் கரையும்.
இன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.
காதலை !
இன்னும் காதலிப்பதாய்.
அவள் மௌனமானாள்
கடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.
சுதந்திரம்,
நிம்மதி,
பெற்றோரிடம் எனக்கிருந்த நம்பிக்கை !
இனி
அவர்கள் விழிகளில் என் விரல்கள்
கவலைச் சாயம் பூசாது.
அவர்கள் சொன்னால்
முதுமக்கள் தாழிக்குள்
முடங்கிவிடவும் எனக்கு சம்மதமே.
உங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஆனால்
அம்மாவுக்கு உங்களைப் பிடிக்குமென்று
நம்பிக்கையில்லை.
அவர்கள்
கலாச்சாரக் குடையுடன் நடப்பவர்கள்
நீங்கள் கிராமிய இசையில் நனைபவர்.
அவர்கள் பார்வையின் அழகை அங்கீகரிப்பவர்கள்
சாப்பிடுவதில்,
நடப்பதில்,
உட்காருவதில்,
ஏன் நகங்களில் கூட நாகரீகம் பார்ப்பவர்கள்.
அவர்களுக்கு உங்களைப் பிடித்திருந்தால்
நான் அதிஷ்டசாலி.
சொல்லிவிட்டு நிமிர்ந்தாள்
அவன் மனதுக்குள் திடீர் அலை ஒன்று
திசை மாறி வீசியது
எண்ணங்களில்
பல்லாயிரம் புறாக்கள்
படபடவென இறகு அடித்து பறந்தன.
அவ்வளவு தானே
அவர்களே உன்னிடம் சொல்வார்கள்
என்னைப் பற்றி
பொறுத்திரு.
சொல்லிவிட்டு
வானவில்களை விழிகளில் பொருத்தி
கலையும் முன் கண்மூடினான்.
சலனம் : 8
இனியனுக்கு ஒன்றும் புரியவில்லை
சுடரின் அம்மாவோடு உரையாடிய வேளைகளில்
வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட
மேஜை நாகரீகம்
உடை நாகரீகம்
நடைநாகரீகம் என்று
ஒன்றுவிடாமல் நடித்துவிட்டான்.
காதல் நிஜமானது !
ஆனால் அதை அடைய
எத்தனை நிறம் மாற வேண்டி இருக்கிறது ?
உண்மையைப் பெற
போலிகளோடும்
உறவாட வேண்டியிருக்கிறதே !!
இன்னும் ஒன்றும் தெரியவில்லை.
சுடரைக் காதலிக்கிறேன் என்று
சுற்றிவளைத்துச் சொல்லிவிட்டான்
அம்மாவைப் பற்றி சுடர் சொன்னவற்றை
உள்வாங்கி சரியாகச் நடந்து விட்டேனா ?
இல்லை இல்லை
சரியாக நடித்து விட்டேனா ?
நேராய் நடந்தால் தான்
அம்மாவுக்குப் பிடிக்கும்
சாப்பாட்டு மேஜையில்
வாயசைவில் வாய்தவறியும்
சத்தம் வரக்கூடாது.
உட்காரும் போது
முதுகெலும்பு
வளைந்துவிடக் கூடாது !
நகத்தின் நுனிகள்
விரலை மீறி
மயிரிழை கூட
முன்னேறக்கூடாது !!
அடடா
என் சொந்த முகம்
செல்லுபடியாகாத ஒன்றா ?
பிடித்தபடி வாழ்ந்த வாழ்க்கை
பிறருக்குப் பிடிக்கவில்லை
பிடிக்கவேண்டுமென்பதற்காகவே
சிலநாள் எனக்குப்
பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது !
இன்னும் ஒன்றும் தெரியவில்லை.
பறித்துக் கொள் என்று
பூ சொன்னபின்னும்
தோட்டக்காரனோடு
மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது !
சுடரை இன்னும் காணவில்லை
கவிதைகள் சொல்வது நிஜம் தான்.
காத்திருக்கும் நிமிடங்கள்
நொண்டியடிக்கும்
கேள்விக் குறியோடு காத்திருந்தாலோ
அது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்
அதோ வருகிறாள் சுடர்
எழுந்துவிட்டான்
இனம் புரியாத ஒரு பதட்டம்..
இதென்ன
நாக்கு கரைந்து கொண்டிருக்கிறதா
உள்ளுக்குள் உமிழ்நீர் ஊற்றெடுக்கிறதே !
நாக்கு நகரமறுத்து
நங்கூரமாக வடிவெடுத்ததாய்
ஒரு பிரமை !
அவள் முகத்தைப் பார்த்தான்.
முகம் மனசின் கண்ணாடி தான்
பெண்களின்
முகம் கூட ஆழமானது !
எதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை !!
சலனம் : 9
சுடர்
அம்மா எப்படி இருக்காங்க ?
ஒரு வார்த்தை கேட்டான்.
அம்மா நலமா இருக்கிறாங்க.
அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவதற்காகவே
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
உங்கள் குழுவில் பலர்
வெளிநாடு போவதாய் கேள்விப்பட்டேன்
தூதரக வாசலில் யாராரோ
தூக்கம் தொலைத்தார்களாமே ?
சுடர் கேட்டாள்.
குளியலறைத்தொட்டியில்
தூண்டில் போடுவதுபோல்,
நேரம் வீணாகிக் கொண்டிருப்பதாய்
தோன்றியது அவனுக்கு !
அம்மா
வேற எதாவது சொன்னாங்களா?
ம்..ம் சொன்னாங்க
உங்களுக்கு பிடிக்கிறமாதிரி
ஒரு வார்த்தை சொன்னாங்க.
சொல்லிவிட்டு
பூக்களை உதடுகளில் உட்கார்த்தினாள் சுடர்.
அவன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக் காற்றை
மெதுவாய் வெளிவிட்டபடி கேட்டான்
என்ன சொன்னாங்க.
என்னைப் பிடித்திருப்பதாகவா ?
இல்லை.
வேறு வார்த்தை சொன்னார்கள்.
அதை சொல்வதற்கு முன்
நம் உறவை
ஒரு அவசரப் பரிசோதனை
செய்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.
நட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய
நம்பிக்கை இருக்கிறது !!
ஐயோ
இமயமலை ஏறும்போது
கால்களில் ஆணி அறையாதே.
நட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.
கடலிலிருந்து நதியை
வடித்தெடுக்க முடியாது.
அம்மா என்ன சொன்னாங்க.
அது மட்டும் சொல்லிவிடு.
கொஞ்சம் பதட்டம்
கொஞ்சம் கேள்விக்குறியோடு சொல்லி முடித்தான்.
“புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ”
அது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி.
நான் நம்பவில்லை !!
உங்கள் கண்களில்
உண்மைக்காதல் உருகி வழிந்ததாம்
நாகரீக மணம்
அவர்கள் நாசிக்கு எட்டியதாம்
தெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம்
இதற்கெல்லாம் மேல்
மதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும்
உண்மைகூட ஒளிந்திருக்கிறது இனியன்.
இனியன் மகிழ்வின் விளிம்பிற்கு வழுக்கினான்.
அவனுடைய கரங்கள்
சட்டென்று சிறகுகளானதாய் உணர்ந்தான்
இரத்த அணுக்களின் அத்தனை துணுக்கிலும்
சந்தோஷ மின்னல் ஒன்று
சத்தமின்றி முத்தமிட்டுக் கொண்டது !!
சுடர்ர்ர்ர்..
உதடுகளோடு சேர்ந்து அவன் கண்களும்
சந்தோஷத்தில் கத்தின !!!
சுடர் சிரித்தாள்
அவன் மெதுவாக
அவளுடைய கரம் பற்றினான்.
தீண்டல் என்பது
உடல் சம்பந்தப் பட்டதில்லை என்பதை
முதன் முதலாய் உணர்ந்தான்.
பல பெண்களின் கரங்களைப் பற்றியிருக்கிறான்
வாழ்த்துச் சொல்லவும்
வரவேற்புச் சொல்லவும்
ஆனால் இப்போது தான் விரல்களின் வழியே
உணர்வுகளின் ஊர்வலத்தை உணர்கிறான்
இரத்தத்தில் புது அணுக்கள் பிறந்ததாய்
அவனைச் சுற்றி
ஆக்சிஜன் மட்டுமே அடைபட்டுக்கிடப்பதாய்.
உலக உருண்டையை உள்ளங்கைக்குள்
சிறைப்பிடித்ததாய்.
ஏதேதோ உணர்வுகள்.
பல தேர்வுகளில் வென்றிருக்கிறான்
ஆனால்
இப்போதுதான்
தேர்வாளர்களையே வென்றதாய் மகிழ்கிறான்.
காதல்
உடலின் எல்லா உணர்வுகளுக்கும் உறவா ?
காதல் வந்தவுடன்
பெருமிதம் அவனுக்கு தலைதூக்கியது !!!
சிரித்துக் கொண்டிருந்தவன்
சட்டென்று நிறுத்தினான்
என் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே !!!!
சலனம் : 10
வீட்டில் என்ன சொன்னாங்க இனியன் ?
இரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த
அதே பரபரப்பு.
இன்று சுடரின் விழிகளில்.
இப்போது தான் ஊரிலிருந்து வருகிறான்
காதலைச் சொல்ல கிராமம் சென்றுவிட்டு
அவன் பேசவில்லை
அவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்
சுடர்
என்னை மன்னிச்சுடு
வீட்டில் ஒத்துக்கலை
சட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல
அவள் விழிகள் வழிந்தன
அதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்
இதயம் உடைந்தான்
என்ன சுடர்
வீட்டில எல்லோருக்குமே சம்மதம் தான்.
சும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .
உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.
உங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் ?
காதல் என்பது வேப்பங்காய்
கிராமத்து மனிதருக்கு.
கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் அழுகையாய் சொல்லிவைத்தாள்.
எனக்கும்
என் அப்பாவுக்கும்
தலைமுறை இடைவெளி பிரச்சனை பிறந்ததே இல்லை.
அவர் கிராமத்தின் வரப்புகளில் நடக்கிறார்
நான் நகரத்தின் சாலைகளில் நடக்கிறேன்.
அவர் சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்
நான் சுவாசிக்க
டீசல் புகையை வடிகட்ட வேண்டியிருக்கிறது.
ஆனாலும்
நான் இருக்கும் வருடத்தில் தான் அவரும் வாழ்கிறார்.
என் விருப்பங்களை காயவைத்து
அவருடைய எண்ணங்களை வாழவைப்பதில்லை.
எங்கள் கிராமத்தின் தரைகள் கூட
பச்சையம் தயாரிப்பவை
பச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்
அதனால் தானோ என்னவோ
நம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காட்டினார்.
இருந்தாலும் அங்கீகாரம் பெற
அம்மாவின் முந்தானையோடு தான் நான்
முன்னேற வேண்டியிருந்தது.
தொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.
அவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை
சிரித்தாள்.
இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது இனியன்
எதிர்ப்புகள் இல்லாமல்
விதிமுறைகள் விதிக்கப் படாமல்…
நன்றி இனியன்.
என்னுடைய சுதந்திரத்துக்கு
சிறையிடாமல்
சிரிப்பதற்கு மட்டுமே எனைப்பழக்கிய
நீங்கள் தான் என் உலகம்
உங்கள் அறிமுகம் இல்லாவிட்டால்
நான் ஒரு
சிரிப்பு சொர்க்கத்தை சந்தித்திருக்க முடியாது.
சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்
எதிர்பாராத விதமாய் காதலுக்கு
எமன் வருவான் என்பதை இருவருமே அறியவில்லை !!!
சலனம் : 11
போய்த்தான் ஆகவேண்டுமா ?
பொடிப் பொடியாய் உதிர்ந்தபடி
கேட்டாள் சுடர்.
ஆறுவாரங்கள் தானே
அமெரிக்கப் பயணம்.
இரண்டு ஆண்டுகள் என்றதை மறுத்துவிட்டேன்
ஆறுவாரங்கள் என்பது கூட
எனக்கு
ஆறு வருடங்களாய் தான் தோன்றுகிறது.
உன் முகம் பார்க்காத நாட்கள்
எனக்கு விடிந்ததாகவே தெரிவதில்லை.
உன்னோடு பேசவில்லை என்றால்
என் உதடுகள் என்னோடு
கோபித்துக் கொள்கின்றன
நீ அலுவலகத்துக்கு வராத நாட்கள் மட்டும் என்
கடிகாரம் உறைந்துபோகிறது.
நண்பர்கள்
உனக்கு இருக்கிறார்கள் சுடர்
அவர்களோடும் நேரம் செலவிட
உனக்கு இது ஒரு சந்தர்ப்பம்
மறுக்க முடியாத அழைப்பு
ஆனாலும் நீ சொன்னால் மறுத்துவிடுவேன்.
சொல்லிவிட்டு முகம் பார்த்தான்.
மொத்த அலுவலகமும்
அழைப்பு வருமா என்று ஏங்கிக்கொண்டுருக்க
வந்த அழைப்பில்
வாடிப்போயிருந்தான் இனியன்.
இல்லை இனியன்
போய் வாருங்கள்.
பிரிவு காதலை வலுவாக்கும்.
உடல்கள் விலக விலக காதல் அடர்த்தியாகும்.
இது நமக்கு
பரிச்சயமில்லாத பரிசோதனைக்காலம்
பக்குவப் பட பழகிக்கொள்ளலாம்..
ஆறுதல் சொல்லிவிட்டு ஆகாயம் பார்த்தாள்.
அந்த நாள் வந்தது.
பெற்றோர் பெருமைப்பட்டார்கள்.
கிராமத்து சாலைகளில்
அப்பா தகவல் விதைத்துக் கொண்டுருந்தார்.
சகோதரர்களும் சகோதரிகளும்
சந்தோஷப் பட்டார்கள்
உறவினர்ப் படை விமானநிலையத்தை ஆக்ரமித்துக் கொண்டது
ஆனால்
இரண்டு உயிர்கள் மட்டும்
திரும்பி வரும் நாளை மட்டுமே
திரும்பத்திரும்ப நினைத்தார்கள்.
புது உலகம்
சாலைகளைப்
பனிக்குவியலுக்குள் புதைத்து வைத்திருந்தது அமெரிக்கா.
மேகம் கரைவதை மறந்து
உடைந்து விழுந்து கொண்டிருந்தது.
காற்று குளிர்சாதன அறைக்குள் உருவாக்கப்பட்டு
நாட்டுக்குள் அனுப்பப்படுவதுபோல்
உறையவைக்கும் குளிர்.
அவள் இருக்கும் இதயம் தவிர
உடலின் மற்ற பாகங்களின் மொத்த வெப்பத்தையும்
செதுக்கி எடுத்துச் சென்றுவிட்டது
நாட்டுக்குள் விரிக்கப்பட்டிருந்த பனிக்காற்று.
விலக விலக
காதல் வலிதாகும் என்பது உண்மைதான்.
ஆனால் அந்த வலி கொஞ்சம் அதிகமாய் தோன்றியது.
தினமும் காலையில்
தொலைபேசிக்குள் இசைகேட்டான்
இ-மெயிலுக்குள் இதயம் அனுப்பினான்
ஓநீ சுவாசிக்கும் காற்றின் மறுநுனியைத்தான்
நானும் சுவாசிக்கிறேன் ஓ
என்று கவிதை சொன்னான்
சிந்தனைகளில் அவள் மட்டுமே
சிறைபட்டுக் கிடந்தாள்.
அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்
இத்தனை ஆண்டு அம்மாவிடம் இருந்தேன்
அம்மா நினைவுகளையே
இவள் நினைவு ஓரங்கட்டிவிட்டதே
இது தான்
மாமியார் சண்டையின் முதல் படியா ?
சுடருக்குப் பிடிக்காததைச் செய்ததில்லை
அவளுக்காய் செய்ததெல்லாம்
இவனுக்கும் பிடித்திருந்தது.
அம்மாவுக்குப் பிடித்ததைச் செய்ததாய்
அவனுக்கு நினைவில்லை
ஆனால் அவன் செய்ததெல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது
தாய்ப்பாசம் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
நினைவுகளில் மூழ்கி மூழ்கி மூச்சடைத்துப் போனதாய்
மூச்சுவிட மறந்து யோசித்துக் கொண்டிருந்ததாய்
நாள்காட்டியை தினமும் நானூறுமுறை பார்ப்பதாய்
வார்த்தைக்கு வார்த்தை நேசத்தைக்கொட்டினாள் சுடர்
இவன் எதைச் செய்தாலும்
அவளுக்குப் பிடிக்குமா என்று யோசித்துச் செய்தான்.
நண்பர்கள் நூறுமுறை சொல்லியும் கேட்கவில்லை
இப்போது
புகை பிடிப்பவர்களைப்
பார்ப்பது கூட இல்லை.
அவளுக்காகச் செய்வதில் ஆனந்தம் இருந்தது !!!
அதோ இதோ என்று ஆறுவாரங்கள் முடிந்தே விட்டது.
இருவர் செல்களிலும்
சிறகுமுளைக்கத் துவங்கியது.
ஆறு வாரங்கள் பொறுத்தாகிவிட்டது
இந்த அரை வாரம் நகர மறுக்கிறதே
சலனம் : 12
அதுவும் நகர்ந்தது
விமான இருக்கையில்
இருக்கை வார்ப்பட்டையோடு
அவள் நினைவுகளியும் சேர்த்துக் கட்டினான்.
அவளுக்காக வாங்கியிருப்பவற்றை கொடுக்கும் போது
அவள் முகத்தைப் பார்க்கவேண்டும்.
ஒரு மழலைப் புன்னகை நிரந்தரமாய் நிறைந்திருக்கும்
அவள் உதடுகளைப் பார்க்கவேண்டும்
சிரிக்க மட்டுமே தெரிந்த அவள்
கண்களைப் பார்க்கவேண்டும்.
திடீரென்று விமானம் நடுங்க ஆரம்பித்தது
ஆகாயக் குளிர் அதன்
இறக்கைகளை உறைய வைத்துவிட்டதா ?
இல்லை !!!
ஆகாய அழுத்தம் அதன் போக்கை
சிதைக்கப் பார்க்கிறதாம்
ஒரே ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்கவேண்டும் எனும்
ஒரு சுயநல விண்ணப்பத்தோடு
கண்மூடினான்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது
பயணத்தின் சாலைகளில் பழுதுகள் நீங்கின
இரவின் கடைசித்துளியில் வீடுசேர்ந்து
விடியலின் முதல் துளியில்
அவள் வீட்டுக் கதவு தட்டினான்.
தூக்கம் தொலைத்து விழித்திருந்தாளா ?
வினாடியில் கதவுதிறக்க
தாமரை மலர் நடந்து வந்தது
இனியன்ன்ன்.
பாதங்களில் சக்கரம் கட்டியதாய்
பாய்ந்துவந்தவள் கட்டிக்கொண்டாள்.
அடடா
இதயப் பந்துக்குள் திடீர் தீ பாய்கிறதே.
விலக மறுத்து விரல்கள் கோர்த்து
உதடுகள் தேடி முத்தமிட்டாள்.
முத்தம்..
அது இரத்தத்தை உறையவும் வைக்கும்
உருகவும் வைக்கவும்.
இதயப் பள்ளத்தில்
வெள்ளைப் பூக்களை விளையவைக்கும்
இலக்கணப் பிழை செய்து
இலக்கியத்தை ஜெயிக்கும்
இது அதரங்களில் அரங்கேறும்
அகழ்வாராட்சி
முத்தமிடாதவன் மனசுக்குள்
மூங்கில்கள் குழலாவதில்லை
முத்தம் அது ஒரு இசை
கொடுத்தாலும் பெற்றாலும் ஒரே சுவை !!!
முத்தம் அது ஒரு கவிதை
எழுதுவதிலும் இன்பம் படிப்பதிலும் இன்பம்.
இருதிசை வீசிய
தென்றல்கள் இரண்டு
சந்தித்துக் கொண்ட சந்தோஷம் அவர்களுக்கு.
மீண்டும் நாட்கள் ராக்கெட் பயணத்தை துவங்கின
மாதங்கள் உருண்டபின்
சம்பிரதாய சடங்குகள்.
இருவீட்டிலும் விருந்து.
திருமண நாளை சீக்கிரம் பாருங்கள்.
என் வயதுப் பெண்கள்
குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள்
நீங்கள் இன்னும்
என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இசையாய் சொன்னாள்
சலனம் : 13
அவன் குரலின் மீது அவளுக்கு தீராத தாகம்.
அவன் பாடல் கேட்டு
அவள் தூங்கியிருக்கிறாள்
இன்னொருநாள்
அவன் குரல் கேட்க தூக்கத்தைத் துறந்திருக்கிறாள்.
காதலில் மட்டுமே
எதிர் துருவங்கள் ஒருபுள்ளியில் உற்பத்தியாகும்
பஞ்சும் நெருப்பும் இணைந்தே வளரும்
அந்த நாள் வந்தே விட்டது.
குமரிமண்ணின் கிராமம் தேடி
நாகரீக மக்கள் நடந்தார்கள்.
இனியனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
நூலில்லாப் பட்டம் போல பறந்தான்
ரோஜாவின்
இதழ்கள் பொறுக்கி புத்தகம் செய்து
மகரந்தம் கொண்டு கவிதை எழுதினான்.
சம்பிரதாயப் பேச்சுக்கள்
சங்கடமின்றி முடிந்தன.
திருமண நாளை முடிவுசெய்வது மட்டுமே
பேசப் பட்ட ஒரே பொருள் !!
காதல் மட்டுமே
சமுதாயக் கீறல்களை ஒட்டவைக்கும்
வரதட்சணைக் கவலைகளை விலக வைக்கும்.
திருமண நாள் நிச்சயமாகிவிட்டது.
இனியனின் எல்லைகள் வளர்ந்தன.
அவன் மகிழ்ச்சி
பசிபிக் கடல்போல ஆழமாய் அவதாரமெடுத்தது.
நண்பர்களிடம் சொன்னான்
திருமண மண்டபம் தேடினான்
உறவினர்களிடம் மகிழ்ச்சியை தெளித்தான்
எல்லாம் முடிந்து
கவலை என்பதை மறந்து போன ஒரு காலைப் பொழுதில்
அவன்
சுடரைத் தேடி சென்னை வந்தான்.
வழியில் எதிர்பட்ட நெருங்கிய நண்பன்
வித்யாசாகரிடம் விளக்கமாய் சொல்லமறுத்து
இருவரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டு
சுடரைத் தேடி ஓடினான்.
சுடர்ர்.
சந்தோசம் தானே ?
பொத்திவைத்த சந்தோஷச் சிறகுகள்
திடீரென வானம் கண்ட மகிழ்ச்சியில்
விரிந்தன அவனுக்கு.
அப்போது தான் அந்த எதிர்பாராத பதில்
அவளிடமிருந்து முளைத்தது
எனக்கு கல்யாணம் வேண்டாம் இனியன்
திருமணத்தை நினைத்தாலே
பயமாக இருக்கிறது !!!
சலனம் : 14
நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது .
திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பய விதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்
முதலில் அதை பொருட்படுத்தவில்லை !!!
உங்களைப் பார்க்க அம்மா வந்தபோது
உங்கள் வீட்டில் யாரும்
நாகரீக உடை அணியவில்லையாமே ?
அம்மா சொன்னாங்க
அதிச்சியாய் இருந்தது இனியனுக்கு.
சுடர்
நீ என்னைக் காதலிக்கிறாயா
இல்லை
என் மேல் பூசப் பட்ட சாயத்தைக் காதலிக்கிறாயா ?
அர்த்தங்களை விட
அடையாளங்கள் தான்
அதிகமாய் விலை போகிறதா ?
என் கிராம மக்கள்
சேரியில் சரிந்திருக்கும்
சாராயக் கடைகளில்
வாழ்க்கையைத் தேடுவார்கள்
அவர்களுக்கு
மதுக்கோப்பை வாங்க பணமும் இருப்பதில்லை
நாகரீக உணவருந்த நேரமும் இருப்பதில்லை
அவர்கள்
வயல்களில் வாழ்க்கையைத் தொலைப்பதால் தான்
நாம்
கணிப்பொறியில் கவிதை எழுத முடிகிறது.
உன்னை நான் கிராமத்து மண்ணில்
நாற்று நடச் சொல்லப் போவதில்லை
நீயும் நானும் நகரத்து ஓரத்தில்
மாத வாடகை கட்டிதான்
வாழ்க்கை நடத்தப் போகிறோம்
அவர்கள் நாகரீகமாக இல்லாதது தான்
உன் காதல் உருமாறக் காரணமா ?
கொஞ்சம் அதிர்ச்சி தொனிக்க கேட்டான்.
ஐயோ
அதெல்லாம் ஒன்றும் இல்லை
சத்தியமாக நான் அதை
குறையாகக் கருதவில்லை
அப்படியென்றால்
பெற்றோரைப் பிரிவதில் மனசு கனக்கிறதா ?
நண்பர்களை பிரிவோம் என்று
உள்மனது கவலைகொள்கிறதா ?
சுதந்திரச் சிறகுகள் வெட்டப்படுமோ
எனும் நிழல் யுத்தமா ?
குடும்ப வாழ்க்கை என்றதும்
பொறுப்புக்களை சுமக்க பயப்படுகிறாயா ??
அடுக்கடுக்காய் கேட்ட
அத்தனை கேள்விகளுக்கும்
இல்லை என்னும் பதில் மட்டுமே
அவளிடமிருந்து வந்தது.
புரியவில்லை
நண்பர்களிடம் ஓடினான்
இது திருமணம் என்றதும் மனதுக்குள் தோன்றும்
மனோதத்துவ மாற்றமா ?
அவள் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
அவள் மாற்றம் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையே
புலம்பினான்.
நண்பா,
உனக்குத் தான் எங்கள் காதலின் ஆழம் புரியும்
காதல் விதையாக இருந்த நாளிலிருந்து
நீ
எங்களுடன் இருக்கிறாய்
நான் என் உயிரையும் அவளையும்
இரண்டாகப் பார்க்கவில்லை
இரண்டறக் கலந்தபின் இல்லை என்கிறாள்
காரணம் கேள்
வித்யா சிரித்தான்
அவளுக்கு பயமா ?
தைரியத்தின் பிம்பமாய் தான்
நான் அவளைப் பார்க்கிறேன்.
உறுதியான உள்ளம் அவளுக்கு
நம்பிக்கை தான் வாழ்க்கையின் துடிப்பு
அதை நிறுத்திவிடாதே
நிச்சயமாக ஒத்துக் கொள்வாள்
சலனம் : 15
தெரியவில்லை எனக்கு
அவள் அம்மாவிடம் பேசினேன்
ஆச்சரியப் பட்டார்கள்.
அப்பாவிடம் பேசினேன் அதிர்ச்சி அடைந்தார்கள்.
காரணம் புரியாமல் கலங்குகிறேன்.
அழுகை இதயத்தை
அடைக்க பேசினான் இனியன்.
கவலைப் படாதே
உன் காதலின் ஆழம் எனக்குத் தெரியும்
உண்மைக்காதல் உடைபடாது
உனக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்கிறேன்
கரம் பற்றி நம்பிக்கை விதைத்தான் வித்யா.
மீண்டும் மீண்டும் பேசினான்
என்னைச் சோதிக்காதே சுடர்
காரணம் இல்லாமல்
முடிவெடுப்பவளல்ல நீ.
உனக்கு கல்யாணமே பிடிக்கவில்லையா
இல்லை
என்னைப் பிடிக்கவில்லையா ?
உனக்கு இன்று இருக்கும்
எந்த ஒரு சுதந்திரமும் அடிமைப்படாது
நம்பிக்கைகொள் என் பிரியமே
என் மீதும்
நம் வாழ்க்கையின் மீதும்
அடைபட்ட மனதோடு பேசினான் இனியன்.
உங்களை எனக்கு பிடிக்கும்
ஆனால்
திருமணம் செய்யுமளவுக்கு பிடிக்கவில்லை
என்ன சொல்கிறாய் சுடர்
நீ தான் காதலிப்பதாய் சொன்னாய்
திருமணம் செய்ய சம்மதம் என்றாய்
வீட்டில் பேச துரிதப் படுத்தினாய்
ஏன் ?
திட்டமிட்டே என்னை பழிவாங்கவா ?
இல்லை
என் உணர்வுகளின் வலிமையை
உரசிப் பார்க்கிறாயா ?
மனிதனின்
தாங்கும் சக்தியை பரிசோதனை செய்கிறாயா ?
சுடர்
என்னை இருளச் செய்யாதே சுடர்.
இதயம் கனக்க பேசினான்.
என்ன சொல்கிறீர்கள் இனியன்
ஒரு வருடக் காதலில்
உயிர்நேசம் விளைந்துவிடாது.
என்
உணர்வுகள் மாறிவிட்டது
என் உணர்வுகளை மாற்றிக் கொள்ள
எனக்கு உரிமை இல்லையா ?
திருமணம் வேண்டாம் என்றால் விட்டு விடுங்களேன்.
என்ன சொல்கிறாய் சுடர்?
ஒரே ஒரு முறை சொல்லிவிடு
காரணம்.
உனக்கு பிடிக்காதது என்ன ?
நேற்று வரை என்னை உலகம் என்றாய்
இன்று என் துருவங்களைக் கூட
துருப்பிடிக்க வைத்துவிட்டாய்.
சொல்
காரணம் மட்டும் சொல்லி விடு.
பாறை சுமக்கும் பாரத்துடன் கேட்டான்.
சொல்லலாம் என்றால் வருத்தப் படுவீர்கள்
அதுதான் கவலையாய் இருக்கிறது
இப்போது நான்
சந்தோசப் படுகிறேன் என்கிறாயா ?
இன்று எனது பிறந்தநாள்.
ஆனால்
என் மனம் முழுவதும்
கவலைக் கற்கள் தான் குவிந்து கிடக்கின்றன
என் கால்கள் வேர் விட்டதாய் பூமியைவிட்டு
நகர மறுக்கின்றன.
என் சுவடுகள் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது..
என் நிழலின் நீளம் கூட குறைந்துவிட்டது
சொல்..
எதுவானாலும் சொல்
பொதிமாட்டு மனசோடு நடப்பது கடினம்
சொல்லிவிடு.
காதைத் தீட்டி அமைதியானான்.
சுடர் வாய் திறந்தாள்
நான்
நான்.வித்யாசாகரைக் காதலிக்கிறேன்.
சலனம் : 16
இடி ஒன்று
இதயமையத்தைக் குறிவத்துத் தாக்கியதாய்
தோன்றியது அவனுக்கு
வானம் வெறிச்சோடிப் போயிருக்க
கண்களில் பெருமழை பெருக்கெடுத்தது
அருவி ஒன்று சூரியனை உருக்கி
தலைமேல் கொட்டியது போல்
சட்டென்று எரிந்தான் .
இதயத்தின் எல்லைகளெங்கும்
எரிமலைக் குழம்பு பீறிட்டுக் கிளம்பியது.
வார்த்தைகள் புதைபட்டுப் போக
கால்கள் நிலைதடுமாற
இதயத்துடிப்பு இருமைல் தூரம் கேட்க
மயக்கத்தின் முதல் நிலைதொட்டதாய் உணர்ந்தான்
வித்யாவிடம் சொல்லிவிட்டேன்
அவனும் ஒத்துக்கொண்டான்.
என்னை மன்னித்துவிடுங்கள்.
அவள் வார்த்தைகள்
ஏதோ ஏழ்கடல் தாண்டிய
தீவுக்குள்ளிருந்து வருவதாய்
தோன்றியது அவனுக்கு
பிறகு என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கவில்லை..
சலனம் : 17
எதையும் அவனால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை
காதல் மேல்
எனக்கு சந்தேகமில்லை
அதில்
உன் பிம்பம் மட்டுமே உருமாறி விழுந்தது
கவிதை எழுதினான்
டைரியின் பக்கங்களில் கண்ணீர் தெளித்தான்.
கவிதைக் காகிதத்தில் கண் துடைத்தான்.
கவலைகளை கொட்ட கவிதை போல் சிறந்த
ஒரு வடிகால் இல்லை.
வலிகளை வார்த்தையில்
விளக்க அவனால் முடியவில்லை.
மாலை நேரம் வந்தால் கூடவே கண்னீரும் வந்துவிடுகிறதே
நேற்றுவரை என் கரம் கோர்த்து
மாலைகளைத் துரத்தியவள்
இன்று
என் நண்பனின் கரம் சேர்த்து என் எதிரில் சிரிக்கிறாள்.
நண்பா
நட்பின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை
மறுபரிசீலனை செய்யவைத்தாயே.
உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
உபயோகித்துக் கொண்டாயே.
விடியலின் முதல் நிமிடம் முதல்
கடைசிநிமிடம் வரை
கணிப்பொறியோடு கண்விழித்துக் கிடந்தான்.
காதல்
சொருகும் போது ரோஜா
உருவும் போது உதிரம் தோய்ந்த ஆணி
சிலுவைக்குக் கூட மூன்று ஆணிகள்
காதலுக்கு
அளிக்கப்படுவதெல்லாம் ஆணிகளே
வார்த்தைகளில் கூர்தீட்டி
வடுக்களை
எனில் தொடுத்தவளே
என்
சலனங்களின் சொந்தக்காரியே
இதோ என் மனம்
சலனமற்றுக் கிடக்கிறது
உன் நேசம் நிறம் மாறிவிட்டதால்
என் இதயத்தோட்டம்
அயலானின் அரிவாள்மனையில்
அறுவடையாகிறது
ஈரமணலில்
கோழிக்குஞ்சு கிளறிய நிலமாய்
என் மனசு
மௌனத்தில் கூட நிறைய வாசித்த நான்
இன்று
நினைவுகளால் மூச்சுத்திணறுகிறேன்
நிழலாய் வந்தால்
இருளில் கரைவாய் என்றுதான்
நினைவாய் வரமட்டுமே
உன்னை அனுமதித்தேன்.
இன்று நீ.
நினைவுகளில் , கனவுகளில் என்னுடன்
நிஜத்தில் நீ நிலம் மாறி விதைக்கப்பட்டாய்.
பேனாவும் விரலும் மறுக்கும் வரை
கவிதை எழுதினான்.
கவலைகளின் சாயங்களை
முதன் முதலாய் உணந்தான்.
ஏனோ தெரியவில்லை
அவள் மீது இம்மியளவும் கோபம் வரவில்லை.
நடந்ததெல்லாம் கனவாகக் கூடாதா என்று
கனவு கண்டான்.
என் சாலைகளெங்கும்
ஏன் பூவியாபாரிகள்
முட்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள் ?
அரளிப் பூக்கள்
தங்களை ஏன்
ஆம்பல் என்று அறிமுகம் செய்கின்றன ?
நீ விலகிய நான்
ஓட்டை விழுந்த ஓசோன் போல
என்னாலேயே ஒதுக்கப் படுகிறேனே.
ஒரு மாறுதல் வேண்டும்
இதயம் கதறியது
தீக்குழியில் இருந்துகொண்டு
தாகம் தீர்க்க முடியாது
இன்னொரு முறை
அமெரிக்க வாய்ப்பு வராதா என்று வேண்டினான்.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு செய்தி
இருவேறு மனநிலையில் இருபொருள் சொல்கிறதே.
ஆறுவாரப் பயணத்திற்கே அலறியவன்
இன்று
வருடப் பயணம் வேண்டுமென்கிறான்.
சலனம் : 18
நம்பிக்கை சிதைவது தான்
வாழ்வின் மிகப் பெரிய வேதனை
நண்பனும் காதலியும்
ஒருசேர விலாவில் ஈட்டி பாய்ச்சிய வேதனை !!!
நண்பா.
எதற்காக இந்த
விஷம புன்னகை ?
என் ரோஜாக்களைக்
களவாடியதற்கா ?
என் வானவில்லைக் கிழித்து
எனக்கே மலர்வளையம் நெய்ததற்கா ?
என் பூக்களை எரித்து
நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் நடத்தியதற்கா?
இல்லை
என் நதிகளை கடல்பாதையிலிருந்து கடத்தி
பாலைவனத்துகுப் பரிசளித்ததற்கா?
புரிந்துகொள் நண்பனே
நீ
என் மேகத்திலிருந்து
நீர்த் துளிகளைத் திருடினாய்
எனக்கு இன்று
வண்ணங்களிலிருந்து வண்ணத்துப் பூச்சியை
வடித்தெடுக்கும் வலிமை கிடைத்திருக்கிறது.
உன் தலைக்குமேலும்
வல்லூறுகள் ஒர்நாள் வட்டமிடும்
நீ
சாகவில்லை என்பதற்கு அப்போது
சான்று தேவைப்படும்.
கவிதை எழுதிய மறுநாள் அவனுக்கு
ஆறுதல் செய்தி.
ஓராண்டு அமெரிக்கப் பயணம்.
இட மாற்றம் என்பது இல்லையென்றால்
மனமாற்றம் மலராது
மாதங்கள் உருண்டோ டின.
நினைவுகளின் பிடியிலிருந்து அவன் மெல்ல மெல்ல
விலகிக் கொண்டிருந்த ஒர் பொழுதில்
நண்பன் சொன்னான்
சுடருக்குக் கல்யாணமாம்.
சலனம் : 19
சுருக்கென மனதுக்குள் கூர் ஈட்டி பாய்ந்தது.
மனசு மட்டும்
கண்களுக்குள் ஈரமாய் கவிதை எழுதியது.
நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.
உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.
நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து மட்கிப் போய்விட்டன.
தொடுவானம் தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து தாழிட்டாகிவிட்டது.
மழையில் கரைந்த பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம் உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.
காதலின் வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.
வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்
எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.
கவிதை வடிய
கண்களை மூடினான்
அவன் இதயத்துக்குள் ஓர்
இதிகாசம் இறக்கத் துவங்கியிருந்தது.
இன்னொரு வரலாறு படைக்க
அவன் விரல்கள் விழித்திருந்தன.

நன்றி.
kaialsh

true love

பிரிய நிலவே,எத்தனை நாளாகிறதுஉன்னைப் பார்த்து.ஓர்பதினான்காம் பிறைபோலநினைவிடுக்கில்நகர்கின்றன நாட்கள்.காதலின் கணங்களும்காத்திருப்பின் கனங்களும்கால்களைபாறையோடு பதியனிட்டதாய்இறுகிக் கிடக்கின்றன.தேடலின் விழிகள் கூடஉறைந்து விட்டன.ஆனாலும்விடாமல் என் உள்ளத்தை மட்டும்உழுது கொண்டே இருக்கிறேன்.உன்ஒவ்வோர் புன்னகைக்கும்உயிரின் ஒருபாதையைஉயிலெழுதிய பழக்கத்தால்இன்றுமிச்சமிருப்பதெல்லாம்பட்டா இல்லாத பகுதிகளே.என்பொருளாதாரப் பல்பறித்துகாதலுக்குகால நெய்ததில்என் முதுகெலும்பு முறித்தேகைத்தடி செய்ய வேண்டியகட்டாயம் எனக்கு.ஆனாலும்,உன் வயல்க்காட்டுத் தூறல்வற்றி விடவில்லை என்றே,என் நாற்றுக்கள்நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.ஒத்திகைக் காலக்குத்தகை முடிந்ததால்,அரங்கேற்ற மேடைதூண்களில்தவறாமல் தவமிருக்கிறேன்.நீவந்தபின் விரிப்பதற்காய்தோகைகளைக் கூடதுடைத்து வைத்திருக்கிறேன்.நீ,வரும் வடிவத்தை மறவாமல்கடிதத்தில் அனுப்பு.நீபல்லக்கில் வருவாயானால்நான்கடிவாளத்தோடுகாத்திருக்கக் கூடாதில்லையா ?
Regards
kailash

internet love

இணையம்,


அட்சக் கோடுகளையும்தீர்க்கக் கோடுகளையும்இறுக்கமாய்க் கட்டிவிட்டு,பூமிப் பந்தைஒற்றைப் புள்ளியில்உட்கார வைத்திருக்கிறது இணையம்.மடியாத ஆடைகளுக்காய்மல்லிட்டு,கண்ணாடியின் கண்களுக்கு முன்இமைக்காமல் நின்று,பிம்பங்களோடுபிடிவாதம் பிடித்துயாரும் இப்போது காதலிப்பதில்லை.விரல் தொட்டுக் கசங்கிப் போய்உதட்டுப் பதிவுஒப்பந்த முத்தங்ககளின் மேல்கையெழுத்திட்டனுப்பும்காதல் கடிதங்கள்இப்போதெல்லாம் காணக் கிடைப்பதில்லை.கடிதத்தைப்,பட்டு விரல் தொட்ட வினாடியில்நெற்றியோரம்வியர்வை அரும்பியதா?விழிகளோரம் வெட்கம் விளைந்ததா ?என்பதைநேரில் தரிசிக்கும் வரமும் வருவதில்லை.இப்போதெல்லாம்காதல்பூங்காக்களில் பூப்பதில்லை.நிம்மதி கொள்கின்றன பட்டாம் பூச்சிகள்,பூங்காக்களில் பூக்கள் தான்பூக்கின்றனவாம்.கடற்கரையில் கால் படுவதை விடகணிணிப் பலகையில்விரல் தொடுவதையேவிரும்புகிறது கல்லூரி வட்டம்.இணையம் ஊமையாகும்நாட்களில்ஐந்து தலைபடபடப்புப் பாம்பொன்றுகாதலரை தீண்டித் தொலைக்கும்.அவசர தொலைபேசிஅழைப்புகளோஇணையத்தின் இணைப்புகளால்இருட்டறைக்குள் எறியப்படும்.காதலியின் கண் கண்டுகால் நகர்த்தா வார்த்தைகள்கணிணி கண்டால் தான்கையசைக்கின்றன.பட்டென்று பதிலிறுத்தால்பல்லிடுக்கில் வார்த்தைகள்படுகாயம் படக்கூடும்.இணையமோபட்டென்றுச் சொல்லென்றுபதட்டத்தைத் தருவதில்லை.உரசலின் வெப்பத்தை விடநம்பிக்கையின் சத்தம் தானேகாதலுக்குத் தேவை.மடிமீது தலைசாய்த்துமகரந்தங்கள் மயங்காமல்,விசைப்பலகையில் விரல் இருத்திகாதலை நிலை நிறுத்தல்சாத்தியமிங்கே.இணையம்வரம்புகளை மீறாமல்நரம்புகளை மீட்டும் தளமல்லவா.எல்லை மீறும் முறுக்கு மடல்களைநில்லென்று நிறுத்துதலும்சாத்தியமல்லவா.மின்மடலில் இதயங்கள்இடம் மாறும்,மின் அரட்டையில்மனம் கொஞ்சம் மெருகேறும்.காதலரே,இணையாக் காதலையும்இணையம் இணைக்கும்.முதல் பார்வையில் தான்காதல் வருமா,இனிமேல்முதல் மடலில் வருமென்றுமுழங்கிச் சொல்லுங்களேன்.முகிலினங்கள் அலைகிறதேமின்னஞ்சல் மறந்ததுவோஎனபுதிதாய்ப் பாடுங்களேன்.இணையத்தில் இணைப்புப் பிழைஎனகாதல் பொய்யைநவீனப் படுத்துங்களேன்.கிறுக்கல் கையெழுத்தென்றுகாதல் இங்கேமறுக்கப் படுவதில்லைமகிழுங்களேன்.இணையம் என்பதுஇமயம் தான்ஆனாலும்காதலரே கவனியுங்கள்,அருகிலேயேஅழகியொருத்தியை இருத்திக் கொண்டுநீதான் என் உலகம் என்றுஉங்களுக்கு யாரேனும்வலையில்வலை விரிக்கக் கூடும்.கணிப்பொறி வித்தையில்புகைப்படம் புதுப்பித்து,நடிகனின் நடையிலேமுடவனும் உங்கள் முன்வரக் கூடும்.உனக்கனுப்பியகாதல் கடிதத்தின்கண் காணாப் பிரதி,தபால்த் தலைச் செலவின்றிபல கன்னியரின்கணிணிச் ஜன்னல்களைக்காதலுடன் தட்டியிருக்கக் கூடும்.மாடலிங் தான் தொழிலென்றுமாடசாமியும், தன்முன் வழுக்கையைத் தடவிக் கொண்டும்மூச்சு விடாமல்இருமிக் கொண்டும்,யாஹூவுக்குள் வசிக்கக் கூடும்.அவரசக் காதலர்க்குஓர்அவசிய எச்சரிக்கை.தெருப் பெயர் மாறினாலும்தபால்க் காரன் சமாளிப்பான்,ஓர்சிறு புள்ளி மாறினாலேஇணையக் காரன் புறக்கணிப்பான்.நினைவில் கொள்ளுங்கள்.வாழ்வுக்குத் தேவை இணை.அதைத் தரும்இணையத்துக்கு இல்லை இணை !( சந்தவசந்தம் இணையக் குழுவில் எழுதிய கவியரங்கக் கவிதை. தலைப்பு : இணையத்துக்கு இல்லை இணை. )

heart

எங்கே என் இதயம்?
இதயம் இருப்பவர்க்கெல்லாம் காதல் வரும்,
அது இருந்த போது எனக்கு புரியவில்லை,
இதயம் தொலைந்து போனது போல் உணர்கின்றேன்,
எனக்குள் காதல் மலர்ந்து விட்டதோ!!!

Regards.
kailash

Thangam

எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன.
எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது.
இன்றுவரையிலும் ஒரு குண்டுமணி தங்கம்கூட உடலில் ஒட்டாத அளவுக்கு வாழ்க்கையில் ராசியுடையவன் நான். என்றாவது ஒரு நாளாச்சும் ஒரு மோதிரமாவது வாங்கிக் கையில் போட வேண்டும் என்ற சின்னப்புள்ளைத்தனமான ஆசை மட்டுமே எனக்குள் உண்டு.
இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது இன்றைய தினசரிகளில் வெளிவந்திருக்கும் தங்கம் பற்றியச் செய்திக் கட்டுரைகள்.
இனி தினசரி செய்திக் கட்டுரைகளுக்குள் செல்வோம்.
“தங்கத்தின் விலை இன்றைக்கு முதன்முறையாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 10,040 ஆக உயர்ந்துள்ளது. கிராம் விலை ரூ.1255 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தின் விலை சென்னை சந்தையில் ஒரு கிராமுக்கு நேற்று ரூ.1253 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து உச்சபட்சமாக 10,040 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் ஒரு பவுன் விலை ரூ.10024 ஆக இருந்தது.
சமீப காலமாக தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதற்குச் சில காரணங்களை இந்தத் தொழிலில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
முதல் காரணம்... பங்குச் சந்தை வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக அங்கு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரண்டு.. அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
இதனால் மற்ற நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கிக் கொள்ளும்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுகிறது.
இதன் காரணமாக பங்கு முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மூன்று... தென் ஆப்ரிக்காவில் கடுமையான மின்வெட்டு காரணமாக தங்கம் வெட்டி எடுப்பது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது.
தேவை அதிகமாக வரும்போது உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கம் தேவைப்படும் தொழில் துறையினரும், தங்க நகை உற்பத்தியாளர்களும் இப்போதே தங்கத்தை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான்கு... டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் அன்னியச் செலாவணி அதிகம் வைத்திருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.
பெரிய நாடுகளே அதிக அளவில் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வருவதால், உற்பத்தியைவிடவும் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஐந்து... கச்சா எண்ணெய்-தங்கத்தின் மதிப்பு இவை இரண்டும் 15:1 என்ற விகிதத்தில் இருந்து வந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் நிகராக இருந்தது. அது சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 9:1 ஆகிவிட்டது. அது மீண்டும் 15:1 ஆகும்வகையில் தங்கத்தின் விலை எகிறுகிறது.
ஆறு... வீட்டுக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி திவாலாகி வருகிறதாம்.
100 டாலர் இருந்த வங்கிப் பங்குகளின் மதிப்பு 2 டாலராகச் சரிந்துள்ளதாம். இதனால் வந்த விலைக்கு பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் நேற்று 30 பைசா சரிந்துள்ளது. பொதுவாக இது போன்ற நிலைமை வந்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் கூடுமாம்..
இவைகளைத்தான் தற்போதைய திடீர் தங்கத்தின் விலையுயர்வுக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.
யார் என்ன காரணம் சொன்னால் என்ன?
மரத்தில் தொங்கும் முருங்கைக்காயின் விலையே கைக்கு எட்டாமல் மேலே, மேலே போய்க் கொண்டிருக்க.. பூமிக்குள் கண்ணுக்குச் சிக்காமல் அமிழ்ந்து கிடக்கும் தங்கத்தின் விலை மட்டும் கைக்கு சிக்கிவிடுமா என்ன..?
‘விலையைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!’ என்ற பெருமையுடையை அந்தத் தங்கம் பற்றிய சில விபரங்களைப் பார்ப்போம்..
தங்கம் தரத்தின் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறதாம். இந்த அழகின், ‘அலகின்’ பெயர் ‘காரட்’. அதனை சதவீத அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.
24 கேரட் என்பது 100 சதம்.
22 கேரட் 91.75 சதம்.
18 காரட் 75 சதம்.
14 காரட் 58.5 சதம்.
12 காரட் 50.25 சதம்,
10 காரட் 42 சதம்,
9 காரட் 37.8 சதம்,
8 காரட் 33.75 சதம்
என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் இந்தத் தரம் வித்தியாசப்படுகிறதாம்.
இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் - இவற்றில் 22 காரட்
சீனா, ஹாங்காங், தைவான் - இவற்றில் 24 காரட்
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் - இவற்றில் 21 காரட்
தெற்கு ஐரோப்பிய நாடுகள் - இவற்றில் 18 காரட்
ரஷ்யாவில் - 14 காரட்
அமெரிக்கா, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் 8 முதல் 18 காரட்
என்று அளவிடப்படுகிறதாம்.
உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.
லண்டனின் கரன்சி, ‘பவுன்ட்’ ஆக இருந்தாலும், ‘டாலரில்’தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனராம். ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராம் கொண்டதாம்.
தங்கம் நகை செய்ய மட்டும் பயன்படுவதில்லை. செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு, தங்கப்பல், மருந்து தயாரிப்பு என பல துறைகளிலும் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
1933ம் ஆண்டு நிலவரப்படி 71 சதவிகிதம் தங்க நகை செய்யவும், 22 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்யவும், தங்கப் பல் செய்ய 7 சதவிகிதம் தங்கமும் பயன்படுத்தப்பட்டது.
இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான தங்கத்தின் தேவை, நகை தயாரிப்பையும் மிஞ்சிவிட்டதாம்.
தங்க நகை தயாரிப்பு குறைந்து, முதலீட்டுக்கான தங்க நாணயங்களும், தங்க பிஸ்கட்டுகளும் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தங்கத்தில் முதலீடு செய்வதிலும், நகை மீதான மோகத்திலும் எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.
2. அமெரிக்கா
3. சீனா
4. சவுதி அரேபியா
5.வளைகுடா நாடுகள்
6.துருக்கி
7.இந்தோனேசியா
8.எகிப்து
- இப்படி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன தங்கப் பித்துள்ள நாடுகள்.
தங்கத்தின் உற்பத்தியில் 1991-ம் ஆண்டுவரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்ததாம்.
சோவியத் பல நாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2007-வரை தென்னாப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் கோலோச்சி வந்தது. இந்த ஆண்டில் அந்த முதலிடத்தை சீனா பிடித்துள்ளதாம்.
தங்கத்தின் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்காக பார்த்தால்,
சீனா 11.3 சதவீதமும்,
தென் ஆப்ரிக்கா 11.1 சதவீதமும்,
அமெரிக்கா 10.4 சதவீதமும்,
ஆஸ்திரேலியா 10.3 சதவீதமும்,
இந்தோனேஷியா 7 சதவீதமும்,
பெரு 6.9 சதவீதமும்,
ரஷ்யா 6.2 சதவீதமும்,
கனடா 3.8 சதவீதமும்,
மற்ற நாடுகள் 33 சதவீதமும்
கொண்டுள்ளன.
இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 சதவிகிதம் 1950-க்குப் பின் கிடைத்தவைதானாம்.
பப்புவா நியூகினியா என்ற நாட்டில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் டன் குப்பைகளும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள எல்லா நகரங்களிலும் ஒரு நாளைக்குச் சேரும் குப்பையைவிட இது அதிகம்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மோதிரத்துக்குத் தேவையான தங்கத்துக்காக 20 லட்சம் டன் குப்பை வெளியே எடுக்கப்படுகிறதாம்.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்த அமோக வளர்ச்சியை கீழே காணுங்கள்..
1920- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1930- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.14.80
1931- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1936- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.24.62
1940- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ 29.20
1945- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.49.60
1950- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.79.36
1954- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.58.00
1960- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ. 89.70
1961- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.104.00
1969- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.150.00
1970- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.147.20
1971- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.156.00
1972- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.200.00
1974- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.392.00
1975- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.408.00
1976- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.424.00
1977- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.488.00
1978- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.602.00
1979- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.996.00
1980- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,064.00 & ரூ.1,136.00
1981- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,304.00
1982- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,342.00
1983- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,368.00
1984- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,454.00
1985- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,544.00
1986- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,652.00
1987- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,016.00
1990- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,720.00
1991- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,472.00
1992- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,552.00
1994- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,584.00
1995- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,744.00
1996- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,000.00
1997- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,400.00
1999- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,424.00
2000- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,504.00
2001- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,368.00
2002- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,392.00
2003- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,152.00
2005- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,696.00 & ரூ.4,964.00
2006- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.6,144.00 & ரூ.6,824.00
2007- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.7,516.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை ஜனவரி-4 ரூ.8,072.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை பிப்ரவரி-9 ரூ.8,644.00
2008-மார்ச்-1 ரூ.9264.00
2008-மார்ச்-15 ரூ.9640.00
2008-மார்ச்-17 ரூ.10,024.00
இந்த வகையில் வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே தங்கமும் மக்களோடு, மக்களாக உயர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
இந்தியாவில் குவிந்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 16.29 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் பெண்களின் முதல் விருப்பமான தங்க நகைகள் கையில், கழுத்தில், காலில் கிடந்து அவர்களுக்கு அலங்காரமாகத் திகழ்கிறது.
மனிதர்கள் மட்டும் போட்டால் போதுமா? சாமிக்கு வேண்டாமா? சாமிக்கும் ஏதாவது செஞ்சாத்தானே அது நம்மை பத்திரமா பாத்துக்கும் என்ற பேராசையில் பக்தன் தனக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு கொடுக்கல், வாங்கல் என்ற அக்ரிமெண்ட்டை பத்திரப் பதிவு செய்யாமல் ஏற்படுத்திக் கொண்டு நகைகளை அள்ளிவிட..
இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அத்தனை கோவில்களிலும் குடி கொண்டிருக்கும் சாமிகள்தான் நிறைய தங்கத்தை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். வாழ்க சாமிகள்..
அதோடு கூடவே, கோவிலில் குடி கொண்டிருக்கும் எல்லா சாமியும் “எனக்குத் தங்கத்துல கோபுரம் கட்டலைன்னா உன் கண்ணு முழியைத் தோண்டிருவேன்”னு எல்லா கோவில்காரங்க கனவுலேயும் வந்து சொல்லுச்சாம். அதான் ஊர், ஊருக்கு, மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தாலேயே கோபுரம் கட்டி வெச்சு புண்ணியம் சேரத்துட்டாங்க..
ஏதாவது செஞ்சாவது தன்கிட்ட காசு இருக்கிறதை காட்டணும்னு நினைச்சு தங்கத்தால் பல் கட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்தத் தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது என்பதால்தான் தங்கத்துக்கு மதிப்பு.
அதோடு கூடவே இன்னொரு சிறப்புமுண்டு.
ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு உங்கள் வீட்டு மேஜை மீது போடும் விரிப்பு அளவுக்கு ஒரு தகடு செய்திட முடியுமாம்.
இது மதிப்புமிக்கது என்பதனால், மனித நாகரிகம் உருவான காலத்தில் இருந்தே இதற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
அலாவுதீன் கில்ஜியில் இருந்து, நேற்று அமைந்தகரையில் பிடிபட்ட செயின் திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை.. அதிலும் தங்கத்தை..
இப்போதும் உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களின் பின்னணியில் நம்முடைய தங்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்ட இந்தியர்களும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நகைக்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்பு பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கி வைப்பதுதான் அதிகம்.
ஆண்டுக்கு 950 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்குகின்றனராம்.
உலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 13,000 டன் தங்கம் இருப்பது இந்தியாவில்.
இன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய்.
ஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.
யார் சொன்னது இந்தியாவா ஏழை நாடுன்னு..? அடப் போங்கப்பா..!

Regards
kailash